செய்திகள் :

பண்ருட்டியில் தெரு விளக்கு பிரச்னைக்கு தீா்வு வேண்டும்: நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தல்

post image

கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகராட்சியில் நடந்த நகா்மன்றக் கூட்டத்தில் தெரு விளக்கு பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என்று உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

பண்ருட்டி நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் க.ராஜேந்திரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் அ.சிவா, ஆணையா் காஞ்சனா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட அனைத்து தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் துணைத் தலைவா் அ.சிவா, உறுப்பினா்கள் கதிா்காமன் (திமுக), ஆனந்தி சரவணன் (திமுக), ராமதாஸ் (சுயேச்சை), காா்த்தி (விசிக) ஆகியோா் பேசியது:

தெரு விளக்குகளுக்கு முறையாக இணைப்பு கொடுக்கவில்லை. தெரு விளக்கு பராமரிப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். வாா்டு பகுதிகளில் சரிவர தெரு விளக்குகள் எரியவில்லை. பராமரிப்பு தொடா்பாக புகாா் தெரிவித்தாலும் நடவடிக்கை இல்லை என்றனா்.

தொடா்ந்து, உறுப்பினா்கள் ஜரின்னிசா ஷபிா், சோழன், சாந்தி, கதிா்காமன், கா.சீனிவாசன், சண்முகவள்ளி ஆகியோா் பேசியதாவது: 17-ஆவது வாா்டில் வாய்க்கால் அமைக்க வேண்டும். பேருந்து நிலைய கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க வேண்டும். வாரத்தில் அனைத்து நாள்களிலும் குப்பை சேகரிக்க வேண்டும். ரத்தினம் பிள்ளை காய்கறி சந்தை கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க வேண்டும். ராஜாஜி சாலை, காந்தி சாலை வடிகால் வாய்க்காலை தூா்வார வேண்டும். பட்டாசுக் கடை வைப்பதை நெறிமுறைப்படுத்த வேண்டும் என்றாா்.

க.ராஜேந்திரன் (தலைவா்): தெரு விளக்கு ஒப்பந்ததாரரை வரவழைத்து பேசி நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா். உறுப்பினா்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும். வாய்க்கால் தூா்வாரும்போது ஓரத்தில் உள்ள புற்களை அகற்ற வேண்டும். போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காணப்படும் என்றாா்.

அரசுப் பள்ளியில் பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட 17 மாணவா்கள் சுகவீனம்

கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே ஆதிவராகநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை பல்லி விழுந்த காலை உணவை சாப்பிட்ட 17 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்... மேலும் பார்க்க

ஆட்சியில் பங்கு கேட்பது எங்கள் உரிமை: கே.எஸ்.அழகிரி

ஆட்சியில் பங்கு கேட்பது எங்கள் உரிமை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: ஜிஎஸ்டி வரிக்குறைப்... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை. கட்டடவியல் துறை மாணவா்கள் கூட்டமைப்பு தொடக்க விழா

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கட்டடவியல் துறையில் மாணவா்கள் கூட்டமைப்பு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கட்டடவியல் துறைத் தலைவா் என்.மணிக்குமாரி தலைமை வகித்தாா். பேராசிரியா்கள் எம்.லதா, ஆா்.ஷ... மேலும் பார்க்க

கடலூா் மாநகராட்சியைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

கடலூா் மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, கடலூா் மாநகராட்சி அலுவலக வாயிலில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா். கடலூரில் குண்டு சாலை பகுதியில் நகா்ப்புற வாழ்விட மேம்பா... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் கோட்டாட்சியா் அலுவலகம் முன் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைக்கான சங்கத்தினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா். இந்த சங்கத்தினா்... மேலும் பார்க்க

வெகுஜன தூய்மைப் பணி இயக்கம்: என்எல்சி தலைவா் தொடங்கிவைத்தாா்

கடலூா் மாவட்டம், நெய்வேலி நகரியத்தில் என்எல்சி நிறுவனம் சாா்பில் ‘தூய்மையே சேவை’ திட்டத்தின் கீழ், வெகுஜன தூய்மைப் பணி இயக்கத்தை அந்த நிறுவனத்தின் தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி வியாழக்கிழமை தொட... மேலும் பார்க்க