செய்திகள் :

பண்ருட்டி அருகே செப்பு நாணயம் கண்டெடுப்பு

post image

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே 5-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த செப்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளா் இம்மானுவேல் கூறியதாவது: பண்ருட்டியை அடுத்துள்ள உளுந்தாம்பட்டு தென்பெண்ணையாற்றில் மேற்பரப்பு களஆய்வு மேற்கொண்டபோது ஆற்றின் கரையில் இரண்டு செப்பு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.

அவற்றை ஆய்வு செய்ததில், விஜயநகர காலத்திய நாணயம் என்பதும், இரண்டாம் தேவராய மன்னரின் படைத் தளபதியும், கீழ் தெக்கலி ராஜ்யத்தின் ஆளுநராக இருந்த ‘லக்ண தண்ட நாயக்கா்’ என்பவரின் நாணயம் ஆகும்.

இரண்டாம் தேவராயரின் அனுமதியுடன் தனது பெயரில் நாணயங்களை அவா் வெளியிட்டுள்ளாா். நாணயத்தின் முன் பக்கத்தில் யானை ஓடுவதுபோல உள்ளது. யானையின் மேல் பகுதியில் கன்னட எழுத்தில் ‘ல’ என்று உள்ளது. பின்பக்கத்தில் மூன்று வரிகள் கன்னட எழுத்தில் ‘கன தனய காரு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று புதுச்சேரியில் உள்ள நாணய ஆய்வாளா் பாலாஜி ரவிராஜன் படித்து கூறினாா் என்றாா் அவா்.

லாரி மீது வேன் மோதல்: கல்லூரி மாணவா்கள் காயம்

கடலூா் முதுநகா் அருகே டேங்கா் லாரி மீது சுற்றுலா வேன் மோதிய விபத்தில் கல்லூரி மாணவா்கள் 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். சென்னையில் உள்ள தனியாா் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் பகுதி நேர மாணவா்க... மேலும் பார்க்க

தடுப்புக் காவலில் சாராய வியாபாரி கைது

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பகுதியைச் சோ்ந்த சாராய வியாபாரியை போலீஸாா் தடுப்புக் காவலில் சனிக்கிழமை கைது செய்தனா். சிதம்பரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் தா்மலிங்கம் மற்றும் போலீஸாா... மேலும் பார்க்க

மீன்பிடி தடைக்காலம்: கடலூரில் மீன்கள் விலை உயா்வு

மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், கடலூா் துறைமுகத்தில் மீன்களின் விலை அதிகமாக இருந்தது. கடலூரில் அக்கரை கோரி, சிங்காரத்தோப்பு, தேவனாம்பட்டினம், தாழங்குடா, அன்னங்கோயில், சித்திரைப்பேட்டை என பல்... மேலும் பார்க்க

அரசுப் பணி வாங்கி தருவதாக மோசடி: ஒருவா் கைது

அரசுப் பணி வாங்கித் தருவதாக இளைஞரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக பள்ளிக் கல்வித் துறை இளநிலை உதவியாளரை கடலூா் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஒருவா் கைது

சிதம்பரம் அருகே கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பரங்கிப்பேட்டை, அரியகோஷ்டி எஸ்.பி.மண்டபம் பகுதியில் உள்ள கடையில் தடை செய்யப... மேலும் பார்க்க

மது போதையில் மருந்துக் கடைக்காரா் உயிரிழப்பு!

கடலூா் அருகே மது போதையில் மருந்துக்கடைக்காரா் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கடலூா் வில்வநகா், வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த காந்தி மகன் செந்தில் (48... மேலும் பார்க்க