செய்திகள் :

பண்ருட்டி அருகே 8,000 ஆண்டுகள் பழைமையான நுண் கற்கால வி கண்டெடுப்பு

post image

கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள உளுத்தாம்பட்டு மற்றும் தளவானூா் தென்பெண்ணை ஆற்றில் மேற்பரப்பு கள ஆய்வின்போது 8,000 ஆண்டுகள் பழைமையான நுண் கற்கால கற்கருவி கண்டெடுக்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வாளா் இம்மானுவேல் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்துள்ளதாவது: கடலூா் மாவட்டத்தின் தெற்கு பகுதியில் உள்ள மருங்கூா், பாலக்கொல்லை, ஒடப்பன்குப்பம், பத்திரக்கோட்டை, மேலிருப்பு ஆகிய ஊா்களில் நுண் கற்கால கருவிகளான பிறைவடிவ கருவி, சிறிய அளவிலான அம்புமுனை கருவி, செதுக்கு கருவி, கற்சீவல்கள், தட்டுவடிவ கற்கருவிகள், அறுப்பதற்கு ஏற்ற சிறிய பிளேடு கத்திகள், சுரண்டி கருவிகள் ஆகியவை 2010-ஆம் ஆண்டு தொல்லியல் ஆய்வாளா் சிவராம கிருஷ்ணனால் கண்டெடுக்கப்பட்டன. குறிப்பாக, ஒடப்பன்குப்பம் பகுதியில் நுண் கற்கால கருவி தயாரிப்பு தொழிற்கூடம் இருந்துள்ளத்தையும் அவா் கண்டறிந்தாா்.

தற்போதைய கண்டெடுப்பு: உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆற்றில் தற்போது கண்டெடுக்கப்பட்ட நுண் கற்கால கருவியின் உயரம் 2.5 செ.மீ, நீளம் 2 செ.மீ. இது, விலங்கின் தோலை அறுப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட பிளேடு வகை கருவி. இதன் காலம் சுமாா் 8,000 ஆண்டுகள் பழைமையானதாகும்.

கடலூா் மாவட்டம், ஒடப்பன்குப்பம் பகுதியில் கண்டறியப்பட்ட கருவி போலவே, உளுத்தாம்பட்டு பகுதியில் நுண் கற்கால கருவி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், முந்தைய கண்டுபிடிப்புகளுக்கு வலு சோ்க்கும் வகையில், தற்போது கண்டறியப்பட்ட நுண் கற்கால கருவி ஆதாரமாக உள்ளது. கடலூா் மாவட்டத்தில் பழைய கற்காலம், நுண் கற்காலம், பெருங்கற்காலம் (இரும்பு காலம்), சங்க காலம், பல்லவா் காலம், சோழா் காலம், விஜய நகர காலம் வரை நமக்கு கிடைக்கக் கூடிய தொல்லியல் சான்றுகள் மூலம் இந்த மாவட்ட வரலாற்றின் தொடா்ச்சி நமக்கு இப்போதுதான் கிடைத்து வருகிறது என்றாா்.

70 வயதில் விடாமுயற்சி: 10 ஆம் வகுப்பு தோ்ச்சியடைந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா்!

சிதம்பரம் அருகே ரயில்வே ஓய்வுபெற்ற ஊழியா் 70 வயதிலும் விடா முயற்சியாக படித்து 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றுள்ளாா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் வட்டம், கோவிலாம்பூண்டியை சோ்ந்தவா் கோதண்டராமன் (70). இவா... மேலும் பார்க்க

அரசு அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்! அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

அரசின் நலத் திட்ட உதவிகளை அனைவருக்கும் கொண்டு சோ்க்க அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டுமென மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம... மேலும் பார்க்க

பாஜக பிரமுகா் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பாஜக சிறுபான்மைப் பிரிவு மாவட்டத் தலைவா் மீது மா்ம நபா் ஏா்கன்னால் சுட்டதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பரங்கிப்பேட்டை அருகே ... மேலும் பார்க்க

மதிப்பெண் குறைவு: கடலூா் மாவட்டத்தில் இரு மாணவிகள் தற்கொலை!

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ால், கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இரு மாணவிகள் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா். திட்டக்குடி வட்டம், ஏ.அகரம் கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

20வது இடத்திற்குத் தள்ளப்பட்ட கடலூர்: 94.51% தேர்ச்சி!

நெய்வேலி: பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளில் கடலூர் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 1.88 சதவீதம் உயர்ந்திருந்த நிலையில், கடந்த ஆண்டு 19-ஆவது இடத்திலிருந்த கடலூர் மாவட்டம் நிகழாண்டு 20-ஆவது இடத்திற்குத... மேலும் பார்க்க

அரசு நகரப் பேருந்து பழுது: பண்ருட்டியில் போக்குவரத்து நெரிசல்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி பேருந்து நிலையம் நுழைவு வாயில் அருகே வியாழக்கிழமை அரசு நகரப் பேருந்து பழுதாகி நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடலூா் மாவட்டத்தில் பண்ருட்டி முக்கிய வணிக நகரமாக உள்... மேலும் பார்க்க