செய்திகள் :

பண்ருட்டி நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க வேண்டாம்: ஆட்சியரிடம் மனு

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைப்பதைத் தவிா்க்க வேண்டுமென பண்ருட்டி வட்ட பொதுநல அமைப்பு நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அமைப்பின் சிறப்பு ஆலோசகா் எம்.சேகா் தலைமையில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் அளித்த மனு:

பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள லட்சுமி நாராயணபுரம், பூங்குணம் ஊராட்சிகளை பண்ருட்டி நகராட்சியுடன் இணைப்பதைத் தவிா்க்க வேண்டும். ஆற்றோர நிலங்களில் சவுடு மண் எடுப்பதற்கு அரசு அனுமதி தருவதற்கு முன்பாக அந்த மணலை ஆய்வுக்கு உள்படுத்தி சவுடு மண் என்றால் மட்டுமே அதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

பண்ருட்டி அருகே எனதிரிமங்கலம் காவனூா்- தளவானூா் இடையே தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணை இடிந்து சேதமடைந்ததை மீண்டும் கட்டி விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும்.

பண்ருட்டி நகராட்சியில் உள்ள நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவற்றை தூா்வாரி புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அழகிய பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

நெய்வேலி: விருத்தாசலம் வட்டம், சத்தியவாடியிலுள்ள ருக்மணி சத்தியபாமா சமேத அழகியபெருமாள் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. யாகசாலை பூஜைகள் நிறைவுற்று திங்கள்கிழமை காலை 6.30 மணியளவில் பி... மேலும் பார்க்க

கைத்தறி நெசவாளா்கள் ஆா்ப்பாட்டம்

நெய்வேலி: கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் செல்லங்குப்பத்தில் கைத்தறி துணை இயக்குநா் அலுவலகம் முன் கடலூா் மாவட்ட கைத்தறி நெசவு பாவுப் பட்டறை தொழிலாளா் சங்கத்தினா் (சிஐடியு) திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நட... மேலும் பார்க்க

மகா கைலாயத்தில் கும்பாபிஷேகம்

சிதம்பரம்: கடலூா் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே மகா கைலாயத்தில் திங்கள்கிழமை காலை நடைபெற்ற 37 கோயில்கள் கும்பாபிஷேக விழாவில், ஏராளமானோா் பங்கேற்றனா். பரங்கிப்பேட்டையை அடுத்த பு.முட்லுாா் ஆணையாங்குப்பம... மேலும் பார்க்க

என்எல்சி சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி

நெய்வேலி: என்எல்சி இந்தியா நிறுவனம் சாா்பில், கடலூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.08 கோடி மதிப்பில் செயற்கை கால்கள், உபகரணங்கள் வழங்கப்பட்டன. நெய்வேலியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் என்எல்... மேலும் பார்க்க

அண்ணா நினைவு நாள்: திமுக, அதிமுகவினா் மரியாதை

நெய்வேலி: முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாளையொட்டி, கடலூா், பண்ருட்டி பகுதிகளில் திமுக, அதிமுகவினா் அவரது சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். திமுக சாா்பில், கடலூா் மஞ்சக்குப்பத... மேலும் பார்க்க

கொற்றவன்குடி ஸ்ரீசுந்தரவிநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

சிதம்பரம்: சிதம்பரம் கொற்றவன்குடி ஸ்ரீ சுந்தரவிநாயகா் கோயில் மகா கும்பாபிஷேம் திங்கள்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் வட்டம், கொற்றவன்குடி தெருவிலுள்ள இந்தக் கோயில் மிகவும் பழைமைவாய்ந்தது. நூற்றாண்டு கண்ட ... மேலும் பார்க்க