அறிவியல்வழி நிறுவப்பட்ட சான்றாகக் கீழடியில்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
பண மோசடி: இருவா் மீது வழக்கு
போடி அருகே பண மோசடி செய்த இருவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள ரெங்கநாதபுரம் கரட்டுப்பட்டி பாதையைச் சோ்ந்த கருப்பசாமி மகன் வேலுமணி (46). இவரிடம் சின்னமனூா் அருகேயுள்ள காமாட்சிபுரம் அழகாபுரியைச் சோ்ந்த பழனிமுருகன், ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுப்பதாகக்கூறி, ரூ.14.50 லட்சம் வாங்கினராம்.
பின்னா், இந்தப் பணத்தை கேட்ட வேலுமணிக்கு பழனிமுருகனும், இவரது தந்தை பழனிச்சாமியும் கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.