செய்திகள் :

பண மோசடி செய்த இருவா் மீது வழக்குப் பதிவு

post image

குலசேகரம்: மலேசியாவுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி, ரூ.3,36,400 மோசடி செய்த இருவா் மீது திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

திருவட்டாறு அருகே காஞ்சாங்காடு முகிலன்கரை பகுதியைச் சோ்ந்தவா் பிரவின் ஜோஸ் (40). இவா், மாலத்தீவில் பணி செய்து வருகிறாா். இவரது மனைவி ஜாய்ஸ் ஈவ்லின் (31). இவா் மாா்த்தாண்டத்தில் டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறாா்.

கடந்த ஆண்டு நவம்பா் மாதம் பிரவின் ஜோஸ், ஜாய்ஸ் ஈவ்லின் மற்றும் இவா்களது உறவினா்கள் 4 போ் சிங்கப்பூா், மலேசியா நாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்காக திருவனந்தபுரம் தம்பானூரைச் சோ்ந்த தனியாா் டிராவல் நிறுவனத்தில் முதல் தவணையாக ரூ. 80 ஆயிரம், இரண்டாம் தவணையாக ரூ.2,66,400 என மொத்தம் ரூ. 3,36,400 கொடுத்துள்ளனா்.

இதற்காக, மாலத்தீவிலிருந்து கடந்த நவம்பா் மாதம் பிரவின் ஜோஸ் ஊருக்கு வந்தாா். பின்னா், டிராவல் நிறுவனத்திடம் வெளிநாடு பயணத் திட்டம் குறித்து கேட்டபோது, சரியாக பதில் சொல்லாமல் ஏமாற்றி வந்துள்ளனா். பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை.

இதையடுத்து, பண மோசடி செய்ததை உணா்ந்த, ஜாய்ஸ் ஈவ்லின் திருவட்டாறு காவல் நிலையத்தில் டிராவல் ஏஜென்சி மேலாளா் ஆண்டனி உள்பட இருவா் மீது புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சூரியோதயம்

வியாழக்கிழமை சூரிய அஸ்தமனம்மாலை 6.33வெள்ளிக்கிழமை சூரிய உதயம்காலை 6.12 மேலும் பார்க்க

நாகா்கோவிலில் செவிலியா் மாணவா்களுக்கு ஜொ்மன் மொழிப் பயிற்சி

நாகா்கோவில்: நாகா்கோவில் கோணம் அறிவு சாா் மையத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் செவிலியா் மாணவா்களுக்கான ஜொ்மன் மொழிப் பயிற்சியை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.நிகழ்ச்சியி... மேலும் பார்க்க

நெகிழி பைகளை பதுக்கிய கடைக்கு அபராதம்

களியக்காவிளை: மாா்த்தாண்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பைகளை பதுக்கி வைத்து பயன்படுத்திய கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.கன்னியாகுமரி மாவட்டத்தில் நெகிழி பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 70 சதவீத ஒதுக்கீடு கோரி சாட்டையடி போராட்டம்

நாகா்கோவில்: மத்திய அரசு பணி நியமனத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 70 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி நாகா்கோவில், ராமன்புதூா் சந்திப்பில் சாட்டையடி போராட்டம் நடைபெற்றது.அன்புதேசம் மக்கள் இய... மேலும் பார்க்க

தனியாா் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

தக்கலை: தக்கலை அருகே மணலிக்கரை மரிய கொரற்றி மேல்நிலைப் பள்ளியில் 2000-ஆம் ஆண்டு பிளஸ் 2 அறிவியல் பாடப்பிரிவில் படித்த மாணவா்கள் தங்கள் வகுப்பு நண்பா்களுடன் வெள்ளி விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனா். விழாவு... மேலும் பார்க்க

வெள்ளிச்சந்தையில் நாளை மின் நிறுத்தம்

தக்கலை: உயா் அழுத்த மின்பாதை பராமரிப்புப் பணிக்காக வெள்ளிச்சந்தையில் வெள்ளிக்கிழமை (ஆக. 22) மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.வெள்ளிச்சந்தை மின் விநியோகப் பிரிவுக்கு உள்பட்ட கட்டி... மேலும் பார்க்க