செய்திகள் :

பதிவுத்துறை வரைவு மசோதா: மத்திய அரசு கருத்துக் கேட்பு

post image

பதிவுத் துறை வரைவு மசோதா 2025 குறித்து பொதுமக்களிடம் பரிந்துரைகள் மற்றும் கருத்துகளை மத்திய அரசு கோரியுள்ளது.

இதுதொடா்பாக மத்திய ஊரக வளா்ச்சி அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

காகித பயன்பாடின்றி இணையவழியில், குடிமக்களை மையமாக கொண்ட, நவீன பத்திரப் பதிவு முறைக்காக பதிவுத் துறை மசோதா 2025-இன் வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

மத்திய ஊரக வளா்ச்சி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நில வளங்கள் துறை தயாரித்துள்ள இந்த மசோதா, அரசமைப்புச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு கொண்டுவரப்பட்ட பதிவுத் துறைச் சட்டம் 1908-க்கு மாற்றாக இருக்கும்.

அசையா சொத்து மற்றும் பிற பரிவா்த்தனைகள் தொடா்பான பத்திரப் பதிவுக்கு பதிவுத் துறைச் சட்டம் 1908 சட்ட அடித்தளத்தை வழங்குகிறது.

பொது மற்றும் தனிப்பட்ட பரிவா்த்தனைகளில் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களின் பங்கு காலப்போகில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. இது பல நேரங்களில் நிதி, நிா்வாகம் மற்றும் சட்ட ரீதியாக முடிவு எடுப்பதற்கான அடித்தளத்தை உருவாக்கியுள்ளது.

எனவே பத்திரப் பதிவு முறை வலுவாகவும், நம்பகமாகவும், சமூக மற்றும் தொழில்நுட்ப வளா்ச்சிகளுக்கு ஏற்ப மாறும் திறன் கொண்டதாகவும் இருப்பது அவசியம்.

30 நாள்களுக்குள் கருத்து: தற்போதுள்ள பதிவுத் துறைச் சட்டம் 1908-இன் கீழ், இணையவழியில் பத்திரங்களை சமா்ப்பித்தல், டிஜிட்டல் அடையாள சரிபாா்ப்புப் போன்ற புதுமையான வழிகளை சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஏற்கெனவே அறிமுகம் செய்துள்ளன.

அதேவேளையில், பத்திரப் பதிவு அதிகாரிகளின் பொறுப்பு மற்றும் கடமைகளை தெளிவாக விவரிப்பதும் முக்கியமாகும். இது சட்டத்துக்கு ஏற்ப பத்திரப் பதிவு முறையில் ஒருமைப்பாடு மற்றும் நம்பகத்தன்மையை நிலைநிறுத்த அதிகாரிகளுக்கு உதவும். இதைக் கருத்தில் கொண்டு, பதிவுத் துறை வரைவு மசோதா 2025 வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா மத்திய நில வளங்கள் துறையின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்து 30 நாள்களுக்குள் ள்ஹய்ஹய்க்.க்ஷளஹற்னஞ்ா்ஸ்ளக்ா்ற்னண்ய் என்ற மின்னஞ்சலில் தங்கள் பரிந்துரைகள் மற்றும் கருத்துகளைப் பொதுமக்கள் பகிரலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

பாக்கு மட்டை பொருள்களுக்கு அமெரிக்கா தடை! முன்னணி ஏற்றுமதி நாடான இந்தியா பாதிப்பு!

பாக்கு மட்டைத் தட்டுகளுக்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. இதனால், இந்தியாவில் பாக்கு மட்டைத் தட்டு உற்பத்தி வெகுவாக பாதிக்கப்படுகிறது.பாக்கு மட்டைத் தட்டுகள் சந்தையானது, உலகளவில் ஆண்டுதோறும் ரூ. 3,... மேலும் பார்க்க

உ.பி: அரசு சுகாதார நிலையத்தில் செல்போன் ஒளியில் பிரசவம்! விசாரணைக் குழு அமைப்பு!

உத்தரப் பிரதேசத்தின் அரசு சுகாதார நிலையத்தில் 4 கர்ப்பிணி பெண்களுக்கு செல்போன் வெளிச்சத்தில் பிரசவம் பார்க்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள தனிக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. பெருர்பாரி ம... மேலும் பார்க்க

அங்கிதா பண்டாரி கொலை வழக்கில் பாஜக தலைவர் மகன் உள்பட 3 பேர் குற்றவாளி; ஆயுள் தண்டனை

கடந்த 2022ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட அங்கிதா பண்டாரி வழக்கில், முன்னாள் பாஜக தலைவர் மகன் உள்ளிட்ட மூன்று பேர் குற்றவாளி என தீர்ப்பளித்திருக்கும் நீதிமன்றம், மூவருக்கும் ஆயுள் தண்டனை பிறப்பித்திருக்கிற... மேலும் பார்க்க

என்ன, ஜோதா பாய் - அக்பர் திருமணம் பொய்யா? ராஜஸ்தான் ஆளுநர் பரபரப்புப் பேச்சு!

முகலாயப் பேரரசர் அக்பருக்கும், ராஜ்புத் இளவரசி ஜோதா பாய்க்கும் நடைபெற்றதாகக் கூறப்படும் திருமணம் சித்தரிக்கப்பட்டது என்றும், பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியர்களின் செல்வாக்கினால் ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரிய... மேலும் பார்க்க

மடத்தின் தலைவரை சீருடையில் சந்தித்த ராணுவ தலைமைத் தளபதி! சமூக ஊடகங்களில் வைரல்!

மத்தியப் பிரதேச மாநிலம் சித்ரகூட்டில் ஆன்மிகத் தலைவர் ராமபத்ராச்சாரியாரை, ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர திவேதி, ராணுவ சீருடையில் சென்று பார்த்து ஆசி பெற்றிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.இது தொடர்பான... மேலும் பார்க்க

இந்தியாவுடன் வலுவான நட்புறவு! பயங்கரவாதத்துக்கு டென்மார்க் கண்டனம்

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, பயங்கரவாதத்துக்கு எதிராக டென்மார்க் கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, இந்தியாவுக்கான டென்மார்க் தூதர் ராஸ்மஸ் அபில்ட்கார்ட் கிறிஸ்டென்சன்... மேலும் பார்க்க