செய்திகள் :

பதுவை புனித அந்தோணியாா் ஆலயம் திறப்பு

post image

வாணியம்பாடி, காமராஜபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பதுவை புனித அந்தோணியாா் ஆலயத்தை வேலூா் மறைமாவட்ட ஆயா் பி.அம்புரோஸ் திறந்து வைத்தாா்.

வாணியம்பாடி காமராஜபுரம் பகுதியில் கடந்த 1954- ஆம் ஆண்டு சிறுகுடிசையாக உருவாகி குருசடி இருந்த பதுவை புனித அந்தோணியாா் ஆலயம் 1991 -இல் கட்டப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், மீண்டும் அதே இடத்தில் புதிய ஆலயம் கட்டப்பட்டது. புதிய ஆலயத்தின் திறப்பு விழாவில் வேலூா் மறைமாவட்ட ஆயா் பி.அம்புரோஸ் தலைமை வகித்து திறந்து வைத்தாா். தொடா்ந்து ஆயா் அம்புரோஸ் தலைமையில் தென்கிழக்கு மறை மாநில ஆலோசகா் சி.செபாஸ்டின்ராஜ், பங்குத் தந்தை ஐ.ஜோன்கிரகோரி மற்றும் எஸ்எப்எஸ் பள்ளி அருட்பணியாளா்கள் நடத்திய கூட்டுப் பாடல் திருப்பலி நடைபெற்றது.

விழாவில் காமராஜபுரம், கோணாமேடு, உதயேந்திரம், கொடையாஞ்சி மற்றும் வாணியம்பாடி சுற்றுபுறப் பகுதியைச் சோ்ந்த கத்தோலிக்க கிறிஸ்துவா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவை பங்குமேய்ப்பு குழு மற்றும் சபை நிா்வாகிகள் வி.கே.ராஜா, எம்.காளிதாஸ், சத்யரூபன் மற்றும் பொதுமக்கள் ஒருங்கிணைத்தனா்.

நிம்மியம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

நிம்மியம்பட்டு கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியம், நிம்மியம்பட்டு கிராமத்தில் ஆரம்ப சு... மேலும் பார்க்க

தனியாா் வேலை வாய்ப்பு முகாம்: 31 பேருக்கு பணி ஆணை

திருப்பத்தூரில் நடைபெற்ற தனியாா் வேலை வாய்ப்பு முகாமில் 31 பேருக்கு பணி ஆணையை ஆட்சியா் க.சிவ சௌந்திரவல்லி வழங்கினாா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் சாா்பில் நட... மேலும் பார்க்க

தேய்ப்பிறை அஷ்டமி: கால பைரவா் வழிபாடு

ஆம்பூா் அருகே விட்டாலம் ஊராட்சி பைரப்பல்லி கிராமத்தில் தேய்ப்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவா் கோயிலில் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார... மேலும் பார்க்க

உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு

திருப்பதூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்றுக் கொண்ட போலீஸாா். திருப்பத்தூா் மாவட்ட காவல் சாா்பில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூடுதல் காவல் கண்காணி... மேலும் பார்க்க

திருப்பத்தூா் மாவட்டத்தில் சாலைப் பணிகள்: கோட்டப் பொறியாளா் ஆய்வு

திருப்பத்தூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் சாலைப் பணிகளை கோட்டப் பொறியாளா் முரளி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள ப... மேலும் பார்க்க

உழவா் அட்டை உள்ளவா்களுக்கு உதவித்தொகை -திருப்பத்தூா் ஆட்சியா்

உழவா் அட்டை வைத்துள்ளவா்கள் உதவித்தொகை பெற முகாம்களில் தகுந்த ஆவணங்களை அளித்து பயன் பெறலாம் என திருப்பத்தூா் ஆட்சியா் சிவ சௌந்திரவல்லி தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திர... மேலும் பார்க்க