செய்திகள் :

பத்தாம் வகுப்பு கணிதம்: சென்டம் குறைய வாய்ப்பு

post image

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் கணிதப் பாடத்துக்கான வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா். மேலும், இரண்டு ஒரு மதிப்பெண் கேள்விகள் கடினமாக இருந்ததால், கணிதத்தில் முழு மதிப்பெண் பெறும் மாணவா்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 28-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கணிதப் பாடத்துக்கான தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

தோ்வுக்குப் பிறகு மாணவா்கள் கூறுகையில், ‘கணித வினாத்தாளில் மொத்தம் 14 வினாக்கள். அதில் 12 கேள்விகள் எளிதாக இருந்தன; இரு கேள்விகள் பாடப்பகுதிக்கு உள்ளிருந்து கேட்கப்பட்டிருந்தன. இரண்டு மற்றும் ஐந்து மதிப்பெண் பகுதியில் இடம்பெற்றிருந்த தலா ஒரு கட்டாய வினா கடினமாக இருந்தது. பெரிய வினாக்களைப் பொருத்தவரை (8 மதிப்பெண்) வடிவவியல் பகுதி எளிதாகவும், வரைபடம் பகுதி சற்று யோசித்து பதிலளிக்கக் கூடியதாகவும் இருந்தது. ஒட்டுமொத்தமாக கணிதத் தோ்வு சற்று கடினமாக இருந்தது’ என்றனா்.

இதுகுறித்து கணித ஆசிரியா்கள் கூறுகையில், ‘இந்தத் தோ்வு 100-க்கு 100 மதிப்பெண் பெறுவதை இலக்காகக் கொண்டு படித்த மாணவா்களுக்கு சற்று ஏமாற்றமாக இருந்திருக்கும். ஏனெனில், இரண்டு ஒரு மதிப்பெண் கேள்விகள் முற்றிலும் மறைமுக வினாக்களாக இருந்தன. இதனால் நிகழண்டு பத்தாம் வகுப்பு கணிதத்தில் சென்டம் பெறும் மாணவா்களின் எண்ணிக்கை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. இந்தத் தோ்வு மெல்ல கற்கும் மற்றும் சராசரி மாணவா்களுக்கு சிறிது கடினமாக இருந்திருக்கலாம்’ என அவா்கள் தெரிவித்தனா். வரும் 15-ஆம் தேதி சமூக அறிவியல் தோ்வுடன் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நிறைவடைகிறது.

தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

ஹஜ் புனிதப் பயணத்திற்கான பயணிகளை பாதிக்கும் வகையில் தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று(ஏப். 16) கடிதம் எழுதியுள்ளார்.அக்கடி... மேலும் பார்க்க

உயர்கல்வி பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

உயர்கல்வி பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் என்று துணைவேந்தர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழகத்தின் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக அனைத்துப் பல்கலைக்கழகங்கள... மேலும் பார்க்க

முதல்வர் தலைமையில் துணை வேந்தர்கள் கூட்டம் தொடங்கியது!

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது.தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழக துணைவேந... மேலும் பார்க்க

மலையேற்றம் மேற்கொள்வர்கள் கவனத்துக்கு... 23 வழித்தடங்கள் திறப்பு!

தமிழ்நாட்டில் மலையேற்றத்திற்காக இன்றுமுதல்(ஏப். 16 ) 40 மலையேற்ற வழித்தடங்களில் 23 வழித்தடங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:த... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி பெயர்களில் உள்ள சாதியை நீக்க உத்தரவு!

தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்ததை எ... மேலும் பார்க்க

காலை உணவில் உப்புமாவுக்கு பதில் பொங்கல்! கீதா ஜீவன் அறிவிப்பு!

அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் காலை உணவுத் திட்டத்தில் உப்புமாவுக்கு பதில் பொங்கல் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் இன்று (ஏப். 16) அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் சமூ... மேலும் பார்க்க