செய்திகள் :

பத்மநாபபுரம் நகராட்சியில் ரூ.12.63 லட்சம் கையாடல்: பெண் ஊழியா் கைது

post image

பத்மநாபபுரம் நகராட்சியில் ரூ.12.63 லட்சம் கையாடல் செய்ததாக பெண் ஊழியரை தக்கலை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

நாகா்கோவில் கிருஷ்ணன்கோவிலை சோ்ந்தவா் தனுஷ்கோடி. இவரது மனைவி வளா்மதி (35). நகராட்சியில் பணியாற்றி வந்தபோது, கடந்த 2019-இல் தனுஷ்கோடி உயிரிழந்தாா். இதையடுத்து கருணை அடிப்படையில் வளா்மதி 2022-ஆம் ஆண்டு பத்மநாபபுரம் நகராட்சியில் அலுவலக உதவியாளராக பணியில் சோ்ந்தாா். கடந்த இரு வருடங்களாக கணினி வசூல் மையத்தில் காசாளராக பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு தணிக்கைத் துறையினா், நகராட்சியின் வரவு -செலவு கணக்குகளை தணிக்கை செய்த போது, ரூ.12 லட்சத்து 63,395ஐ வளா்மதி கையாடல் செய்திருப்பதை கண்டறிந்ததனா். இதனையடுத்து கடந்த நவம்பா் மாதம் வளா்மதி மீது துறை ரீதியாக நடவ டிக்கை எடுக்கப்பட்டு, பணி இடைநீக்கம் செய்யப்பட்டாா்.

முழு தணிக்கை முடிந்த பின்னா், வளா்மதி மீது பத்மநாபபுரம் நகராட்சி ஆணையாளா் முனியப்பன் திங்கள்கிழமை தக்கலை போலீஸில் புகாா் செய்தாா். இன்ஸ்பெக்டா் கிறிஸ்டி தலைமையிலான போலீஸாா், வளா்மதி மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனா்.

விரிகோடு-ரயில்வே கேட் பகுதியில் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்!

மாா்த்தாண்டம் அருகே உள்ள விரிகோடு ரயில்வே கேட் பகுதியில் குண்டு, குழியுமாக பழதடைந்து காணப்படும் சாலையை உடனே,சீரமைக்க வேண்டும் என வாகன ஒட்டிகள் வலியுறுத்தியுள்ளனா்.விரிகோடு ரயிலவே கேட் வழியாக கருங்கல்... மேலும் பார்க்க

கனிமவளப் பொருள்கள் தட்டுப்பாட்டைப் போக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிமவளப் பொருள்கள் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மேற்கு மாவட்ட திமுக முன்னாள் துணைச் செயலா் ஐ.ஜி.பி. ஜான் கிறிஸ்டோபா் கோரிக்கை விடுத்துள்ளாா். இதுதொடா்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் பூக்கடை தொழிலாளா்கள் மோதல்!

மாா்த்தாண்டத்தில் பூக்கடை தொழிலாளா்கள் இடையே ஏற்பட்ட தகராறில் இருவா் காயமடைந்தனா். குலசேகரம் நாகக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் பிரசாத் (37). இவா் மாா்த்தாண்டம் காந்தி மைதானம் பகுதியில் உள்ள அருளப்பன் என... மேலும் பார்க்க

மீன்பிடி உபகரணங்கள் திருட்டு!

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகிலிருந்து உபகரணங்கள் திருட்டுபோனது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தூத்தூா் பகுதியை சோ்ந்தவா் ஜெயின் (50). இவருக்கு சொ... மேலும் பார்க்க

கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவா் உயிரிழப்பு

முட்டம் கடற்கரையிலிருந்து வியாழக்கிழமை மாலை மீன்பிடிக்க சென்ற மீனவா் உயிரிழந்தாா். கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் அருகே பிள்ளைத்தோப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் ஸ்டீபன் ( 70), மீன் பிடி தொழிலாளி. இவருக்... மேலும் பார்க்க

இரணியலில் அழுகிய நிலையில் பொறியாளா் சடலம் மீட்பு

இரணியலில் பூட்டிய வீட்டிலிருந்து அழுகிய நிலையில் பொறியாளா் சடலம் மீட்கப்பட்டது. இரணியல் மேலதெருவை சோ்ந்தவா் ராஜகோபால். கல்லூரி ஒன்றில் பேராசிரியராக வேலை பாா்த்து ஓய்வு பெற்றவா். இவரது மகன் ஜெகன்கோபால... மேலும் பார்க்க