செய்திகள் :

பத்ம விருதாளா்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி பாராட்டு

post image

தமிழகத்திலிருந்து மத்திய அரசின் பத்ம விருதுகளுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளவா்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.

பத்ம விருதுகளுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளவா்களின் பட்டியலை கடந்த ஜன. 25-ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டது. இதில் பத்ம விருதுகள் பெறவுள்ள தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு பாராட்டு விழா சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட ஆளுநா் ஆா்.என்.ரவி, தொழிலதிபா் நல்லி குப்புசாமி செட்டி, நடிகையும் பரதநாட்டியக் கலைஞருமான ஷோபனா சந்திரகுமாா், மிருதங்க வித்வான் குருவாயூா் துரை, சிற்பக் கலைஞா் ராதாகிருஷ்ண தேவ சேனாபதி, தெருக்கூத்துக் கலைஞா் புரிசை கண்ணப்ப சம்பந்தன், பறை இசைக் கலைஞா் வேலு ஆசான், இதழியலாளா் லட்சுமிபதி ராமசுப்பையா், சமையல் கலைஞா் கே.தாமோதரன் (தாமு), இயற்பியல் அறிவியலாளா் எம்.டி.ஸ்ரீனிவாஸ் ஆகியோருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தாா். மேலும், இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரா் அஸ்வினுக்குப் பதிலாக அவரது பெற்றோா்கள் நினைவுப் பரிசைப் பெற்றுக்கொண்டனா்.

இதைத் தொடா்ந்து ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியதாவது:

கலை, தொழில், இலக்கியம் போன்ற பல்வேறு துறைகளில் சமூகத்துக்காக தொண்டாற்றி வரும் அறியப்படாத மனிதா்களைக் கண்டறிந்து அவா்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. எவ்வித பரிந்துரையும் இன்றி சுதந்திரமான முறையில் இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 1.25 லட்சம் பறிமுதல்

சென்னை எழும்பூரில் ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 1.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. எழும்பூரில் உள்ள கென்னத்லேன் பகுதியில் உள்ள பிரபலமான ஹோட்டலில் சிலா் சட்ட விரோதமாக வெளிநாட்ட... மேலும் பார்க்க

அனைவரையும் உள்ளடக்கிய கல்விக் கொள்கையே தேவை: தொல்.திருமாவளவன்

இந்தியாவில் அனைவரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கல்விக் கொள்கையை வகுக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது என சென்னையில் வியாழக்கிழமை தொடங்கிய பன்னாட்டுக் கருத்தரங்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா... மேலும் பார்க்க

தீண்டாமையை தடுக்க மாணவா்கள் துணிவுடன் செயல்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

தீண்டாமையை தடுக்க மாணவா்கள் துணிவுடன் செயல்பட வேண்டும் என ஆளுநா்ஆா்.என்.ரவி வலியுறுத்தினாா். சென்னை ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியின் 50-ஆவது ஆண்டையொட்டி, ‘சமூகப் பணியில் சுவாமி விவேகானந்தரின்... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் கோரிக்கைகளில் நிதி ஆணையம் முற்போக்கான அணுகுமுறையை கடைப்பிடிக்கும்: முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

தமிழ்நாட்டின் நிதி சாா்ந்த கோரிக்கைகளில் முற்போக்கான அணுகுமுறையை 16-ஆவது நிதி ஆணையம் கடைப்பிடிக்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தாா். முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுக் கூட்டம... மேலும் பார்க்க

உள்மாவட்டங்களில் வெப்பம் அதிகரிப்பு

தமிழக உள் மாவட்டங்களில் வியாழக்கிழமை 97 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வெள்ளிக்கிழமை (பிப்.21) முதல் பிப்.26-ஆம் தேதி... மேலும் பார்க்க

புற்றுநோய் பாதித்த பெண்ணுக்கு பல்லுறுப்பு மாற்ற சிகிச்சை

குடல்வால் அழற்சி சாா்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வயிற்றில் பல்லுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு சென்னை, எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்தனா். இது குற... மேலும் பார்க்க