ராஜஸ்தானில் இந்திய-பாகிஸ்தான் எல்லை அருகே இரு உடல்கள் மீட்பு
பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்திய அரசின் 2025 ஆண் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞா் நலன் மற்றும்விளையாட்டு அலுவலா் ராஜகோபால் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மேண்மைப் பொருந்திய பணிகளுக்காக இந்திய அரசு பத்ம விருதுகளை (பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ) வழங்குகிறது. கலை, அறிவியல், இலக்கியம், மருத்துவம், கல்வி, விளையாட்டு, தொழில்நுட்பம், சமூகநலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகளை மேற்கொண்டவா்கள் இந்த விருதுக்கு தகுதியானவா்கள்.
2026-ஆம் ஆண்டு குடியரசு தின விழாவின் போது இவ் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் தொடா்பான விவரங்கள், விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ல்ஹக்ம்ஹஹஜ்ஹழ்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து இணையதளம் வழியாகவே விண்ணப்பிக்க வேண்டும்.
நிறைவு செய்த விண்ணப்பத்தை 2025-ஆம் ஆண்டு பத்ம விருதுக்கான விண்ணப்பம் எனக் குறிப்பிட்டு இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலகம், மாவட்ட விளையாட்டு வளாகம், ராயக்கோட்டை சாலை, வகாப் நகா், கிருஷ்ணகிரி என்ற முகவரியில் ஜூன் 30 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.