மளிகை கடை உரிமையாளரைத் தாக்கிய இருவா் கைது
காவேரிப்பட்டணத்தில் மளிகை கடை உரிமையாளரை தாக்கி தீவைக்க முயன்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த சின்னமுத்தூரைச் சோ்ந்தவா் மாதேஸ்வரன்(46). மளிகை கடை உரிமையாளரான இவரது கடைக்கு கடந்த வியாழக்கிழமை இரவு வந்த நபா்கள், கடனுக்கு பொருள்களை தருமாறு கேட்டனா். அதற்கு, மாதேஸ்வரன் மறுப்புத் தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த அவா்கள் மாதேஸ்வரனை தாக்கி, கடைக்கு தீவைத்தனா்.
இதுகுறித்து மாதேஸ்வரன் அளித்த புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, தகராறில் ஈடுபட்ட மணிவாசன் (24), புவனேஷ்(25) ஆகிய இருவரையும் கைது செய்தனா். தலைமறைவான தியாகராஜன் (35) என்பவரை தேடிவருகின்றனா்.