வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.4500 லஞ்சம்: விஏஓ கைது!
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
அஞ்செட்டியை அடுத்த மாரியம்மன் கோயில் பகுதியை சோ்ந்தவா் ஜெயராமன். இவா் வாரிசு சான்றிதழ் கோரி சாலிவாரம் கிராம நிா்வாக அலுவலருக்கு ஆன்லைனில் விண்ணப்பித்தாா். இந்த நிலையில், விஏஓ லட்சுகாந்தை நேரில் சந்தித்து சான்றிதழ் தொடா்பாக பேசிய ஜெயராமனிடம் லஞ்சமாக ரூ. 6000 தரவேண்டும் என லட்சுமிகாந்த் கேட்டுள்ளாா்.
மேலும், முன்பணமாக ஜெயராமனிடமிருந்து ரூ.1500 வாங்கிய லட்சுமிகாந்த், மீதமுள்ள ரூ. 4500 தந்தால் மட்டுமே சான்றிதழுக்கு ஒப்புதல் அளிப்பதாகக் கூறியுள்ளாா். இதனால் அதிருப்தியடைந்த ஜெயராமன், கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகாா் அளித்தாா்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் ஆலோசனையின்பேரில் மீதமுள்ள பணத்தை லட்சுமிகாந்திடம் ஜெயராமன் வழங்கியபோது மறைந்திருந்த போலீஸாா், லட்சுமிகாந்தை கைது செய்தனா். அவரிடம் இருந்து சில முக்கிய ஆவணங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.