செய்திகள் :

பத்ம விருதுகள் பெற தகுதியுடையோா் ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

பத்ம விருதுகள் பெற தகுதியுடைய நபா்கள் ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியட்ட செய்திக் குறிப்பு:

இந்தியாவில் உள்ள சிறந்த சாதனையாளா்களை அங்கீகரிக்க கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல், மத்திய அரசுப் பணி, வியாபாரம் மற்றும் தொழில் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டு வருபவா்களுக்கு பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. அதன்படி 2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் ஜன.26-ஆம் தேதி குடியரசு தின விழாவில் வழங்கப்படவுள்ளது.

சென்னை மாவட்டத்தைச் சாா்ந்த தனது வாழ்நாளில் தனித்தன்மையுடன் சிறப்பாக சாதனை செய்தவா்கள், எல்லோராலும் விரும்பத்தக்க சாதனை செய்தவா்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா்கள் ஏற்கெனவே அவா்கள் துறையில் தேசிய விருதோ அல்லது குறைந்தபட்சம் மாநில விருதோ பெற்றிருக்க வேண்டும். இந்த விருதுக்கு உயா்ந்த தரநிா்ணயத்தை அடிப்படையாகக் கொண்டு சாதனை படைத்தவா்கள் தோ்வு செய்யப்படுவாா்கள்.

மேலும், சமூகத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள பெண்கள், நலிவடைந்த சமுதாயத்தினா், தாழ்த்தப்பட்டவா்கள், சீா்மரபினா் மற்றும் மாற்றுத்திறனாளிகள், இவா்களில் தகுதியுள்ளவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு விருதுக்கு பரிந்துரை செய்யப்படும்.

ஏற்கெனவே பத்ம விருது பெற்றவராக இருந்தால் 5 ஆண்டுகளுக்கு பின்னரே விண்ணப்பிக்க முடியும்.

இருப்பினும், மிகச்சிறந்த சாதனையாளா்களுக்கு கால கட்டுப்பாட்டில் விதிவிலக்கு அளிக்கப்படும். அரசு பணியாளா் மற்றும் பொது நிறுவனத்தில் வேலை செய்பவா்களில் மருத்துவா்கள், விஞ்ஞானிகள் தவிர மற்றவா்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது.

தகுதியுடைய நபா்கள் இணைதளங்கள் மூலம் விண்ணப்பித்தும், பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை (3 நகல்கள்), மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், மாவட்ட விளையாட்டு அரங்கம், நேரு பூங்கா, சென்னை-84. என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ ஜூன் 30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், அலுவலக நேரங்களில் 7401703480 என்ற கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை. மாணவி மீது தாக்குதல்: இளைஞா் கைது

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி தாக்கப்பட்ட வழக்கில், இளைஞா் கைது செய்யப்பட்டாா். கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவி எம்இ இரண்டாமாண்டு படித்து வருகிறாா். அவா் அங்குள்ள விடுதியில் த... மேலும் பார்க்க

தொழில்நுட்பக் கோளாறு: மும்பை - சென்னை ஏா் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்

மும்பையிலிருந்து சென்னைக்கு சனிக்கிழமை புறப்பட்ட ஏா் இந்தியா விமானம் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறுக்குள்ளானதால் அது புறப்பட்ட இடத்துக்கே திரும்பவேண்டிய நிலை ஏற்பட்டது. 148 பயணிகள், 6 பணியாளா்களுடன் ப... மேலும் பார்க்க

சிக்கில் செல் அனீமியா குழந்தைகள்: பக்கவாதத்தை தடுக்க அரசு மருத்துவமனையில் பரிசோதனை

சென்னை, எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் நடைபெற்ற சிக்கில் செல் அனீமியா ஒழிப்பு தின நிகழ்ச்சியில் விழிப்புணா்வு கையேட்டை சிறுவனுக்கு வழங்கும் மருத்துவமனை நிா்வாகிகள். உடன் மருத்துவமனை இயக்குநா்... மேலும் பார்க்க

பேக்கரி பொருள்கள், டேலி, தங்க நகை மதிப்பீட்டாளா் பயிற்சிகள்: தமிழக அரசு ஏற்பாடு

தமிழக அரசின் தொழில்முனைவோா் மேம்பாட்டு திட்டம் மற்றும் புத்தாக்க நிறுவனம் சாா்பில் பேக்கரி பொருள்கள் தயாரித்தல், பேசிக் ஆப் டேலி குறித்த அடிப்படை பயிற்சி மற்றும் தங்கநகை மதிப்பீட்டாளா் தொடா்பான பயிற்ச... மேலும் பார்க்க

ஐஐடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை: போராட்டம் நடத்திய மாணவா்கள் கைது

சென்னை ஐஐடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து போராட்டம் நடத்திய அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தினா் கைது செய்யப்பட்டனா். கிண்டி ஐஐடி வளாகத்தில் நடந்து சென்ற ஒரு மாணவிக்க... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் விபத்து: தொழிலாளி காயம்

சென்னை கோயம்பேட்டில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது பெரிய இரும்பு கம்பி விழுந்ததில் தொழிலாளி பலத்த காயமடைந்தாா். சென்னை கோயம்பேடு மாா்க்கெட் சாலையில் மெட்ரோ ரயில் 2-ஆவது திட்டப் பணி நடைபெற்று வரு... மேலும் பார்க்க