செய்திகள் :

பனிப்பொழிவு: விராலிமலையில் மலைப்பிரதேசம் போல் காட்சியளித்த வயல்வெளிகள்!

post image

விராலிமலை: விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதால் வாகனங்கள் முகப்பு விளக்கு எரியவிட்டு ஊா்ந்து செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டது. பனிப்பொழிவால் குடியிருப்புப் பகுதியில் அருகருகே உள்ள வீடுகள் கூட வெண்புகை போா்த்திய மலைப்பிரதேசம் போல் காட்சியளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தேசிய நெடுஞ்சாலை, இனாம் குளத்தூா் சாலை, இலுப்பூா் மேட்டுச்சாலை, மேலப்பட்டி, ராமேசுவரம் செல்லும் புறவழிச் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால், குடியிருப்புப் பகுதியில் அருகருகே உள்ள வீடுகள் கூட கண்களுக்கு புலப்படாத வண்ணம் இருந்தது.

பருவநிலை மாற்றத்தால் 50% பேருக்கு சிறுநீரக செயலிழப்பு

பொதுவாக மார்கழி, தை மாதங்களில் அதிகாலை அதிக பனிப்பொழிவு இருக்கும். ஆனால், மாசி மாதத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது என்பது எதிர்பாராது ஒன்று. இதனால்,பொதுமக்கள் அன்றாட பணிகளுக்கு விடிந்து நீண்ட நேரம் ஆன பின்பு தான் வெளியில் வரும் சூழல் விராலிமலையில் நிலவியது.

பட்டமரத்தான் குளம், அம்மன் குளம் உள்ளிட்ட விராலிமலை சுற்றுப்பகுதி வயல் வெளிகள் மினி காஷ்மீர் போன்று காட்சியளித்தது... புற்கள் மீது பனிப்படர்ந்து வெள்ளை நிறத்தில் காட்சியளித்து.

குடியிருப்புப் பகுதியில் அருகருகே உள்ள வீடுகள் கூட கண்களுக்கு புலப்படாத வண்ணம் இருந்தது. விராலிமலை மக்களுக்கு இது புது அனுபவத்தை கொடுத்தது.

மேலும், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, விராலிமலை, ராமேசுவரம் செல்லும் புறவழிச்சாலையில் பயணிக்கும் வாகனங்கள் பனிமூட்டத்தால் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு ஊா்ந்து சென்றன.

சிறைப்பிடிப்பு எதிரொலி: பாக். பிரதமர் பலூசிஸ்தான் பயணம்!

பாகிஸ்தான் நாட்டில் பயணிகள் ரயில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பலூசிஸ்தான் மாகாணத்திற்கு அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் பயணம் மேற்கொள்கின்றார். பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த மார்ச்.11 அன்று குவேட்டாவி... மேலும் பார்க்க

கொலையில் முடிந்த ஆடு,கோழி மேய்ச்சல் பிரச்னை: உறவினர் கைது

அவிநாசி அருகே ஆடு,கோழி மேய்ச்சல் பிரச்னையால் வயதான விவசாய தம்பதியரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிய உறவினர் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அவிநாசியில் ... மேலும் பார்க்க

தமிழர் வடிவமைத்த ரூபாய் குறியீட்டை மாற்றியுள்ளது திமுக! - அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழர் வடிவமைத்த ரூபாய் குறியீட்டை திமுக அரசு மாற்றியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,'திமுக அரசின் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக... மேலும் பார்க்க

பத்மஸ்ரீ விருது பெறவிருக்கும் பறை இசைக் கலைஞர் வேலு ஆசானுக்கு கல்லூரியில் பாராட்டு!

சென்னை: பத்மஸ்ரீ விருது பெறவிருக்கும் பறை இசைக் கலைஞர் வேலு ஆசானை, சென்னை ஏ.எம்ஜெயின்கல்லூரி கௌரவித்துப் பாராட்டியது. பறை இசை என்ற தமிழ்நாட்டின் தொன்மையான, பாரம்பரிய கலையை உயிர்ப்புடன் வைத்திருப்பதில்... மேலும் பார்க்க

40 ஆண்டுகளில் முதல் முறையாக சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! எரிமலை வெடிக்கும் அபாயம்?

இத்தாலி நாட்டின் நேப்பிள்ஸ் நகரத்தில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று (மார்ச் 13) நிகழ்ந்துள்ளது.நேப்பிள்ஸ் நகரத்தில் இன்று (மார்ச் 13) அதிகாலை 1.25 மணியளவில் 4.4 ரிக்டர் ... மேலும் பார்க்க

செஸ் வீரர் பிரணவ் வெங்கடேஷ்-க்கு ரூ.20 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

நாட்டில் 20 வயதுக்குட்டோருக்கான உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக செஸ் வீரர் பிரணவ் வெங்கடேஷ்-க்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.20 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி... மேலும் பார்க்க