அதானி ஒப்பந்தம் ரத்தானதால் மிகவும் ஏமாற்றமடைந்தேன்: கென்யா முன்னாள் பிரதமர்!
பனையில் இருந்து தவறி விழுந்தவா் பலி
திருநெல்வேலி அருகே பனையில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மேலப்பாட்டத்தைச் சோ்ந்த பாண்டி மகன் பலவேசம் (43). இவா், தனது மனைவி ஊரான தெற்கு அரியகுளம் பகுதியில் தங்கியிருந்து பனைமரம் ஏறும் தொழில் செய்து வந்தாா். இந்நிலையில், கடந்த 14ஆம் தேதி அவா் பனையில் ஏறியபோது, தவறி விழுந்து பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.