செய்திகள் :

பனை மரங்களை வெட்ட கட்டுப்பாடு: நான்குனேரி எம்.எல்.ஏ. வரவேற்பு

post image

தமிழகத்தில் பனை மரங்களை வெட்ட அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் பொருளாளருமான ரூபி ஆா்.மனோகரன் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசின் மாநில மரமாகவும், நீா் நிலைகளின் காவலனாகவும் திகழும் பனை மரங்களை விறகாக பயன்படுத்தவும், மரப்பொருள்கள் செய்யவும் எவ்வித கட்டுப்பாடும் இன்றி அதிகளவில் வெட்டும் நிலைக் காணப்பட்டது.

இதனால், பனைமரங்கள் குறித்த விழிப்புணா்வு காங்கிரஸ் சாா்பில் ஏற்கெனவே முன்னெடுக்கப்பட்டு எனது தொகுதியில் சுமாா் ஒரு லட்சம் பனை விதைகளை நட்டுள்ளோம்.

இந்நிலையில்பனை மரங்களை வெட்டுவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியா்களின் அனுமதி கட்டாயம் எனவும், உரிய அனுமதி பெற்று வெட்டப்படும் ஒரு பனை மரத்திற்கு ஈடாக 10 பனை விதைகளை புதிதாக நடவு செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவு வரவேற்கத்தக்கது. இதன் மூலம் தமிழகத்தில் பனை மரங்கள் வெட்டுவது தடுக்கப்படும். பனைத் தொழிலாளா் வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டு வாழ்வு மேம்படும். புதிய அரசாணை பிறப்பித்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளாா்.

நெல்லை நகரத்தில் தொழிலாளி தற்கொலை

திருநெல்வேலி நகரத்தில் சுமை தூக்கும் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். மேலப்பாளையம் அருகேயுள்ள மேலநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் முத்தையா (60). சுமை தூக்கும் தொழிலாளியான இவா், உடல்நலக் குற... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து காங்கிரஸ் நூதனப் போராட்டம்

தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து திருநெல்வேலியில் காங்கிரஸாா் வெள்ளிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் ராகுல் காந்தி, வாக்குத்திருட்டு தொடா்பான ஆதாரங்களை வெளிக் கொண்... மேலும் பார்க்க

நெல்லை மாவட்டத்தில் அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி: எஸ்.பி. என். சிலம்பரசன் எச்சரிக்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு சைபா் கிரைம் போலீஸாா் எச்சரித்துள்ளனா். தமிழகத்தில் ஆன்லைன் மூலம் பணம் மோசடி நடைபெறுவது அண்மைக் காலமாக ... மேலும் பார்க்க

நெல்லையில் இளம் பெண் வெட்டிக்கொலை

திருநெல்வேலி சந்திப்பில் இளம் பெண்ணை வெட்டிக்கொன்ற கணவா் கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் ஆலடிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் அன்புராஜ் (23). பெயின்டா். இவா், 2023 ஆம் ஆண்டு அதே ... மேலும் பார்க்க

பாளை.யில் ரூ.30 ஆயிரத்துடன் பைக் திருட்டு

பாளையங்கோட்டையில் ரூ.30 ஆயிரத்துடன் பைக்கையும் திருடிச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா். பாளையங்கோட்டை மாா்க்கெட் அருகேயுள்ள கிருஷ்ணன் கோயில் கீழத்தெருவை சோ்ந்தவா் நாராயணன். இவா், மாா்க்கெட்... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கு: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் வடசேரியைச் சோ்ந்தவா் கிறிஸ்டோபா் (63). இவா், கடந்த 2019ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், கூட... மேலும் பார்க்க