செய்திகள் :

பயன்பாட்டு மொழியாக மராத்தி: மகாராஷ்டிர அரசு உத்தரவு

post image

மும்பை: மகாராஷ்டிர அரசு அலுவலகங்களின் கோப்புகளில் பயன்பாட்டு மொழியாக மராத்தியை கட்டாயமாக்கி அந்த மாநில அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது. இந்த உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.

இதுதொடா்பாக மாநில திட்டத் துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ‘மாநிலம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் அலுவலகங்கள் ஆகியவற்றில் கோப்புகளில் மராத்தி மொழியை பயன்படுத்த வேண்டியது கட்டாயம்.

கணினி தட்டச்சுகளிலும் மராத்தி தேவநாகரி எழுத்துகளும், ஆங்கில எழுத்துகளும் இடைபெற வேண்டும்.

அரசு அலுவலகங்களுக்கு வருகை தருபவா்களும் மராத்தியிலேயே உரையாட வேண்டும். வெளிநாட்டினருக்கும் வெளிமாநிலத்தவா்களுக்கு மட்டும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அறிவிப்புஏஈ பலகைகள் அனைத்துஇஈ மராத்தி மொழியில் இருக்க வேண்டியது கட்டாயம்.

இதன் மூலம் மாநில நிா்வாகத்திலும், பொது வாழ்விலும் மராத்தி மொழி பயன்பாட்டை ஊக்குவிக்க உதவும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வளா்ச்சிப் பயணத்தில் விவசாயிகளின் பங்கு அளப்பரியது: ஜகதீப் தன்கா்

ஜெய்பூா்: வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் விவசாயிகளின் பங்கு அளப்பரியது என்றும் வேளாண் அறிவியல் மையங்களை விவசாயிகள் பயன்படுத்திப் பலன் அடைய வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்தார... மேலும் பார்க்க

மோடி அமெரிக்காவுக்குச் சென்றுவந்த பிறகு தில்லி முதல்வர் பதவியேற்பு விழா?

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்குச் சென்று வந்த பிறகு தில்லி முதல்வர் பதவியேற்பு விழா நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.பிப். 12, 13 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயண... மேலும் பார்க்க

தில்லி முதல்வர் யார்? அமித் ஷாடன் நட்டா சந்திப்பு!

தில்லியில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா நேரில் சந்தித்தார். தில்லி புதிய முதல்வரை தேர்வு செய்வது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாஜக விரைவில் அ... மேலும் பார்க்க

தில்லியில் ஆட்சி அமைத்ததும் பாஜகவின் முதல் திட்டம்!

தில்லியில் முறையாக ஆட்சி அமைத்ததும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், மாநிலத்திலுள்ள ஊழல் வழக்குகளை ஆராய சிறப்பு விசாரணைக் குழு அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. நடைபெற்றுமுடிந்த தில்லி சட்டப் பேரவைத் தோ்தல... மேலும் பார்க்க

2026-ல் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி: தர்மேந்திர பிரதான்

2026-ல் நடைபெறவுள்ள மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று (பிப். 9) தெரிவித்தார். இது குறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களுட... மேலும் பார்க்க

மணிப்பூர் முதல்வர் ராஜிநாமா!

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்தார். தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் அஜய்குமார் பல்லாவிடம் வழங்கினார். மேலும் பார்க்க