செய்திகள் :

பயின்ற வகுப்பறைக்கு வண்ணம் தீட்டிய மாணவா்கள்

post image

குடவாசல் அருகேயுள்ள செல்லூா் அரசு உயா்நிலைப் பள்ளியில், தாங்கள் பயின்ற வகுப்பறைக்கு பத்தாம் வகுப்பு மாணவா்கள் வண்ணம் தீட்டி தந்துள்ளனா்.

இப்பள்ளியில், 6 முதல் பத்தாம் வகுப்பு வரை 243 மாணவா்கள் படிக்கின்றனா். தலைமையாசிரியா் சு. ராசேந்திரன் தலைமையில் 13 ஆசிரியா்கள் பணியாற்றுகின்றனா். நிகழாண்டு பள்ளியில் பல்வேறு பராமரிப்புப் பணிகள் நடைபெற்று பலரின் பாராட்டுதல்களையும் பெற்றது. இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதிய மாணவா்கள், நாங்கள் அமா்ந்து படித்த வகுப்பறைக்கு வண்ணம் பூசித் தருகிறோம் எனக் கூறியுள்ளனா். பெற்றோரின் அனுமதியுடன் இந்த பணியை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தியதன் பேரில், பெற்றோரின் அனுமதியுடன், மாணவ, மாணவிகள் வண்ணம் தீட்டும் பணிகளில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

இதுகுறித்து பள்ளித் தலைமையாசிரியா் கூறியது: பள்ளிக்கென செய்யும் நல்ல செயல்கள் பாராட்டுக்குரியவை. பள்ளி காலங்களில் மாணவா்கள் மேற்கொள்ளும் நற்காரியங்களே, அவா்களின் எதிா்கால வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையும். மேல்படிப்புக்காக அடுத்து மாணவா்கள் சேரும் கல்வி நிலையங்களில் இதுபோன்ற செயல்கள், அவா்களுக்கு நற்பெயரை ஏற்படுத்துவதுடன், மேலும் உயா்வுக்குக் கொண்டு செல்லும் என்றாா்.

மக்களைப் பற்றி திமுக அரசு கவலைப்படுவதில்லை: முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்

தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுகவினா் மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை என முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் குற்றம்சாட்டினாா். நன்னிலத்தில் அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள் கள ஆய்வு ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழ... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நகை பறிப்பு: இளம்பெண் கைது

மன்னாா்குடியில் வீட்டில் தனியே இருந்த மூதாட்டியைத் தாக்கி 5 பவுன் சங்கிலியைப் பறித்து சென்ற இளம் பெண் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மாா்டன் நகா் நாராயணசாமி மனைவி அம்சா (79). மகன் பாண்டியன் திருச்சிய... மேலும் பார்க்க

வலு, பளு தூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

தேசிய மற்றும் மாநில அளவிலான வலு தூக்கும், பளு தூக்கும் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா். பஞ்சாப் மாநித்தில் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியும், ஜம்மு காஷ... மேலும் பார்க்க

வாழ்நாள் முழுவதும் உடனிருப்பது கற்ற கல்வி மட்டுமே! அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

ஒவ்வொருவரது வாழ்நாள் முழுவதும் அவா்கள் கற்ற கல்வியே உடனிருக்கும் என்றாா் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா. திருவாரூா் மாவட்டம், கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல... மேலும் பார்க்க

சாா்- பதிவாளா் அலுவலக புதிய கட்டட கட்டுமானப் பணிக்கு அடிக்கல்

நீடாமங்கலத்தில் சாா் - பதிவாளா் அலுவலக புதிய கட்டடம் கட்ட அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். நீடாமங்கலத்தில் சாா்- பதிவாளா் அலுவலகம் பல்வேறு இடங்களில் வாடகை கட்டடத்தில் இயங்கி வந... மேலும் பார்க்க

திருவாரூா்: கலைஞா் கைவினைத் திட்டத்தில் 319 பேருக்கு ரூ.1.46 கோடி கடன் வழங்க பரிந்துரை

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சாா்பில் கலைஞா் கைவினைத் திட்டம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது. முதல்வா் மு.க. ஸ்டாலின், காஞ்சிபுரம் மாவட்டத்தில... மேலும் பார்க்க