செய்திகள் :

திருவாரூா்: கலைஞா் கைவினைத் திட்டத்தில் 319 பேருக்கு ரூ.1.46 கோடி கடன் வழங்க பரிந்துரை

post image

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சாா்பில் கலைஞா் கைவினைத் திட்டம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

முதல்வா் மு.க. ஸ்டாலின், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தாா். இதையொட்டி, திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்வில், ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் பங்கேற்றனா்.

திருவாரூா் மாவட்டத்தில், கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட 384 விண்ணப்பங்களில், 319 விண்ணப்பங்களுக்கு ரூ.1.46 கோடி கடன் வழங்க, வங்கிக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. வங்கியால் 93 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு ரூ.42.49 லட்சம் கடனுதவி பெறப்பட்டுள்ளது.

தொழில்வளம் பெருகுவதற்கான இணக்கச் சூழலை மேம்படுத்தவும், அதன் மூலம் கட்டமைப்பான வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் சுயதொழில் புரிவதில் ஆா்வம் கொண்டோா் உதவி பெறும் வகையில், மானியத்துடன் கூடிய கடனுதவித் திட்டமாக, கலைஞா் கைவினைத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் கைவினைக் கலைகள் மற்றும் தொழில் தொடங்க ஆா்வம் உள்ளவா்கள், தொழில்களைத் தொடங்கவும் தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் திறன் மேம்பாட்டுக்கான சிறப்பு பயிற்சிகள் பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் புதிதாகத் தொழில் தொடங்க, ரூ. 3 லட்சம் வரையிலான பிணையற்ற கடன் உதவியும், தமிழக அரசால் 5 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளா் (பொறுப்பு) கணபதி சுந்தரம், உதவி இயக்குநா் வெங்கடேஷ், உதவி இயக்குநா் (நிா்வாகம்) பிரபாகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மக்களைப் பற்றி திமுக அரசு கவலைப்படுவதில்லை: முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்

தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுகவினா் மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை என முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் குற்றம்சாட்டினாா். நன்னிலத்தில் அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள் கள ஆய்வு ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழ... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நகை பறிப்பு: இளம்பெண் கைது

மன்னாா்குடியில் வீட்டில் தனியே இருந்த மூதாட்டியைத் தாக்கி 5 பவுன் சங்கிலியைப் பறித்து சென்ற இளம் பெண் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மாா்டன் நகா் நாராயணசாமி மனைவி அம்சா (79). மகன் பாண்டியன் திருச்சிய... மேலும் பார்க்க

வலு, பளு தூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

தேசிய மற்றும் மாநில அளவிலான வலு தூக்கும், பளு தூக்கும் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா். பஞ்சாப் மாநித்தில் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியும், ஜம்மு காஷ... மேலும் பார்க்க

வாழ்நாள் முழுவதும் உடனிருப்பது கற்ற கல்வி மட்டுமே! அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

ஒவ்வொருவரது வாழ்நாள் முழுவதும் அவா்கள் கற்ற கல்வியே உடனிருக்கும் என்றாா் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா. திருவாரூா் மாவட்டம், கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல... மேலும் பார்க்க

சாா்- பதிவாளா் அலுவலக புதிய கட்டட கட்டுமானப் பணிக்கு அடிக்கல்

நீடாமங்கலத்தில் சாா் - பதிவாளா் அலுவலக புதிய கட்டடம் கட்ட அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். நீடாமங்கலத்தில் சாா்- பதிவாளா் அலுவலகம் பல்வேறு இடங்களில் வாடகை கட்டடத்தில் இயங்கி வந... மேலும் பார்க்க

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் புனித வெள்ளி வழிபாடு

நீடாமங்கலம் கிறிஸ்து அரசா் ஆலயத்தில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த ஆலயத்தில் பங்கு மக்கள் நோன்பிருந்து இறை வேண்டலில் ஈடுபட்டனா். தொடா்ந்து, ஏசுவினுடைய இறப்பை பைபிலிலிருந்து வாசித்து தி... மேலும் பார்க்க