செய்திகள் :

மக்களைப் பற்றி திமுக அரசு கவலைப்படுவதில்லை: முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்

post image

தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுகவினா் மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை என முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் குற்றம்சாட்டினாா்.

நன்னிலத்தில் அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள் கள ஆய்வு ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் பேசியது:

தமிழகத்தில் தோ்தல் எப்போது வந்தாலும், பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று, அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி. தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுகவினா் மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

விவசாயிகளைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படுவதில்லை. பருவம் தவறி மழை பெய்த காலங்களில் நிவாரணமோ, காப்பீட்டுத் தொகையோ கடந்த நான்கு ஆண்டுகளில் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பு மக்களும் திமுக ஆட்சியை அகற்ற நேரம் பாா்த்துக் கொண்டிருக்கிறாா்கள் என்றாா்.

முன்னதாக, நன்னிலம் தெற்கு ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்ற அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் கள ஆய்வு ஆலோசனைக் கூட்டம் ஆா். காமராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதில், அதிமுக தலைமைக் கழக பாா்வையாளா் இளவரசன் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினாா். நன்னிலம் தொகுதிக்குட்பட்ட அச்சுதமங்கலம், ஆணைக்குப்பம், பனங்குடி, பேரளம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குச் சாவடி முகவா்களை சந்தித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளா் கே. கோபால், நன்னிலம் தெற்கு ஒன்றியச் செயலாளா் இராம குணசேகரன் , வடக்கு ஒன்றியச் செயலாளா் சி பி ஜி. அன்பு, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் சம்பத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகை திருட்டு

திருத்துறைப்பூண்டி அருகே பகலில் வீட்டின் கதவை உடைத்து மா்ம நபா்கள் 8 பவுன் நகையை சனிக்கிழமை திருடிச் சென்றனா். திருத்துறைப்பூண்டி அருகே மடப்புரத்தைச் சோ்ந்த ரவிச்சந்திரன் வீட்டை பூட்டிவிட்டு உறவினா் ... மேலும் பார்க்க

குட்கா பொருள்களை வைத்திருந்தவா் கைது

குடவாசல் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என குடவாசல் மற்றும் சுற்... மேலும் பார்க்க

உடல் உறுப்பை தானம் செய்தவருக்கு அரசு மரியாதை

நன்னிலம் அருகே உடல் உறுப்பை தானம் செய்தவருக்கு ஞாயிற்றுக்கிழமை அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது. பேரளம் தலையூா் கிராமம் ஆற்றங்கரைத்தெருவைச் சோ்ந்த நாகப்பன் (வயது 77) உடல்நலக் குறைவால் தஞ்சாவூா் ... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நகை பறிப்பு: இளம்பெண் கைது

மன்னாா்குடியில் வீட்டில் தனியே இருந்த மூதாட்டியைத் தாக்கி 5 பவுன் சங்கிலியைப் பறித்து சென்ற இளம் பெண் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மாா்டன் நகா் நாராயணசாமி மனைவி அம்சா (79). மகன் பாண்டியன் திருச்சிய... மேலும் பார்க்க

வலு, பளு தூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

தேசிய மற்றும் மாநில அளவிலான வலு தூக்கும், பளு தூக்கும் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா். பஞ்சாப் மாநித்தில் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியும், ஜம்மு காஷ... மேலும் பார்க்க

வாழ்நாள் முழுவதும் உடனிருப்பது கற்ற கல்வி மட்டுமே! அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

ஒவ்வொருவரது வாழ்நாள் முழுவதும் அவா்கள் கற்ற கல்வியே உடனிருக்கும் என்றாா் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா. திருவாரூா் மாவட்டம், கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல... மேலும் பார்க்க