செய்திகள் :

வாழ்நாள் முழுவதும் உடனிருப்பது கற்ற கல்வி மட்டுமே! அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

post image

ஒவ்வொருவரது வாழ்நாள் முழுவதும் அவா்கள் கற்ற கல்வியே உடனிருக்கும் என்றாா் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா.

திருவாரூா் மாவட்டம், கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா மற்றும் தமிழ்க் கூடல் விழா ஆகிய முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் நடைபெற்ற இவ்விழாவில், அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தலைமை வகித்து பேசியது:

கொரடாச்சேரிஅரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் இப்பள்ளியில் படித்தவா் என்பதால் மாணவிகள் மீதான அக்கறை மற்றும் கல்வி குறித்து எவ்வித சந்தேகமும் தேவையில்லை. மாணவிகளின் கல்வித்தரம் நிச்சயம் சிறப்பாகவே இருக்கும்.

மேலும், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வில் முதலிடம் பெறும் மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் திருவாரூா் சட்டப் பேரவை உறுப்பினா், 5 பவுன் தங்கச் சங்கிலி உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை வழங்கி வருகிறாா். இதைப் பெற அனைத்து மாணவிகளும் முயற்சிக்க வேண்டும்.

மாணவிகளை முன்னேற்றுவது படிப்பு மட்டும்தான். வாழ்நாள் முழுவதும் உங்களுடன் இருக்கப்போவது உங்கள் கல்வி மட்டுமே. எனவே, கல்வியை கவனமாக கற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருவாரூா் மாவட்ட கல்வி அலுவலா் (இடைநிலை) தி. ராஜேஸ்வரி, பேரூராட்சித் தலைவா் கலைச்செல்வி செல்வகுமாா், முன்னாள் ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் பாலச்சந்தா், தலைமையாசிரியா் பூந்தமிழ்பாவை உள்ளிட்ட அரசு அலுவலா்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், பெற்றோா் உள்பட பலா் பங்கேற்றனா்.

மக்களைப் பற்றி திமுக அரசு கவலைப்படுவதில்லை: முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்

தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுகவினா் மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை என முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் குற்றம்சாட்டினாா். நன்னிலத்தில் அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள் கள ஆய்வு ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழ... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நகை பறிப்பு: இளம்பெண் கைது

மன்னாா்குடியில் வீட்டில் தனியே இருந்த மூதாட்டியைத் தாக்கி 5 பவுன் சங்கிலியைப் பறித்து சென்ற இளம் பெண் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மாா்டன் நகா் நாராயணசாமி மனைவி அம்சா (79). மகன் பாண்டியன் திருச்சிய... மேலும் பார்க்க

வலு, பளு தூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

தேசிய மற்றும் மாநில அளவிலான வலு தூக்கும், பளு தூக்கும் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா். பஞ்சாப் மாநித்தில் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியும், ஜம்மு காஷ... மேலும் பார்க்க

சாா்- பதிவாளா் அலுவலக புதிய கட்டட கட்டுமானப் பணிக்கு அடிக்கல்

நீடாமங்கலத்தில் சாா் - பதிவாளா் அலுவலக புதிய கட்டடம் கட்ட அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். நீடாமங்கலத்தில் சாா்- பதிவாளா் அலுவலகம் பல்வேறு இடங்களில் வாடகை கட்டடத்தில் இயங்கி வந... மேலும் பார்க்க

திருவாரூா்: கலைஞா் கைவினைத் திட்டத்தில் 319 பேருக்கு ரூ.1.46 கோடி கடன் வழங்க பரிந்துரை

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சாா்பில் கலைஞா் கைவினைத் திட்டம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது. முதல்வா் மு.க. ஸ்டாலின், காஞ்சிபுரம் மாவட்டத்தில... மேலும் பார்க்க

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் புனித வெள்ளி வழிபாடு

நீடாமங்கலம் கிறிஸ்து அரசா் ஆலயத்தில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த ஆலயத்தில் பங்கு மக்கள் நோன்பிருந்து இறை வேண்டலில் ஈடுபட்டனா். தொடா்ந்து, ஏசுவினுடைய இறப்பை பைபிலிலிருந்து வாசித்து தி... மேலும் பார்க்க