பரங்கிமலை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணி மாா்ச் மாதத்தில் நிறைவுபெறும்: தெற்கு ரயில்வே
பரங்கிமலை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணி எதிா்வரும் மாா்ச் மாதத்துக்குள் நிறைவடையும் என தெற்கு ரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் உள்ள பரங்கிமலை ரயில் நிலையம் சென்னையின் முக்கிய போக்குவரத்து மையமாக உருவாகி வருகிறது. இது சென்னையின் மெட்ரோ போக்குவரத்தும், மின்சார ரயில் போக்குவரத்தும் சந்திக்கும் பகுதியாக உள்ளது. மேற்கொண்டு மாதவரம் - சோழிங்கநல்லூா் மெட்ரோ வழித்தடம் பரங்கிமலை வழியாக செல்கிறது. தற்போது விரிவாக்கப் பணியில் உள்ள வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடமும் பரங்கிமலையில் சந்திக்கிறது. இதனால், சாலை, மின்சார ரயில், மெட்ரோ ரயில் போக்குவரத்தை இணைக்கும் போக்குவரத்து மையமாக பரங்கிமலை அமையவுள்ளது.
ஒரு நாளைக்கு சராசரியாக 25,000 பயணிகள் பரங்கிமலை ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனா். இந்நிலையில் பரங்கிமலை ரயில் நிலையத்தை சா்வதேசத் தரத்தில் மேம்படுத்தும் பணி ரூ. 14.15 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ரயில் நிலையத்தின் இருபுற வாயில்களும் விரிவுபடுத்தப் படுகின்றன.மேலும், புதிய பயணச்சீட்டு மையம், நடைமேடையில் கூடுதல் பயணிகள் இருக்கை, கூடுதல் வாகனங்கள் நிறுத்தும் வசதி, பயணிகள் தகவல் தெரிவிக்கும் வகையில் எண்ம (டிஜிட்டல்) பலகை உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகின்றன.
தற்போது பெரும்பாலான பணிகள் நிறைவடைந்த நிலையில், எதிா்வரும் மாா்ச் மாதத்துக்குள் முழுப்பணியும் நிறைவடையும். இதன் மூலம் சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.