செய்திகள் :

பரமக்குடி-ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை: மோடிக்கு இபிஎஸ் நன்றி

post image

தமிழ்நாட்டின் சாலை இணைப்புத் திட்டங்களுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் முன்னுரிமை வழங்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி இடையிலான இரு வழி தேசிய நெடுஞ்சாலை (என்.எச். 87) போக்குவரத்துக்கான பயன்பாட்டில் உள்ளது. இதனுடன் தொடர்புடைய மாநில நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் இந்த நான்கு வழிச் சாலை அமைக்க ஒப்புதல் வழங்கியது.

இத்திட்டம் பரமக்குடி, சத்திரக்குடி, அச்சுந்தன்வயல், ராமநாதபுரம் போன்ற விரைவான வளர்ச்சி கண்டுவரும் நகர்ப்புறங்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுவதுடன், இந்தப் பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டு முக்கிய வழிபாட்டுத்தலங்களுக்கும் பொருளாதார மையங்களுக்கும் இடையிலான இணைப்பை வலுப்படுத்தும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி இடையே சுற்றுலாவை மேம்படுத்தவும் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை மேம்பாட்டுக்கான புதிய வாய்ப்புகளுக்கும் இத்திட்டம் உதவும். 8.4 லட்சம் நேரடி மனித வேலை நாள்களையும் 10.45 லட்சம் மறைமுக மனித வேலை நாள்களையும் இது உருவாக்கும்.

தேசிய நெடுஞ்சாலை எண் 38, 85, 36, 536, மற்றும் 32 ஆகிய ஐந்து முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளையும், 3 மாநில நெடுஞ்சாலைகள் (எண் 47, 29, 34) ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, மாநிலத்தின் தென்பகுதி முழுவதும் ஒரு முக்கிய பொருளாதார, சமூக மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கான முனையங்களுக்கு தடையற்ற போக்குவரத்து இணைப்பை வழங்கும்.

கூடுதலாக, இந்த மேம்படுத்தப்பட்ட வழித்தடமானது மதுரை, ராமேசுவரம் ஆகிய முக்கிய ரயில் நிலையங்கள், மதுரை விமான நிலையம் மற்றும் பாம்பன், ராமேசுவரம் ஆகிய சிறிய துறைமுகங்கள் ஆகியவற்றுடன் இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் பல்முனை போக்குவரத்து ஒருங்கிணைப்பை உறுதி செய்யும். இந்தப் பகுதிகள் முழுவதும் சரக்கு மற்றும் பயணிகளின் விரைவான போக்குவரத்தை எளிதாக்கும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

தமிழகத்துக்கு நல்ல செய்தி

இதனிடையே, நான்கு வழிச்சாலைத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதை "தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு ஒரு நல்ல செய்தி!' பரமக்குடி - ராமநாதபுரம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும். பொருளாதார வளர்ச்சியையும் சுற்றுலாவையும் அதிகரிக்கும்' என தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மோடிக்கு இபிஎஸ் நன்றி

இந்நிலையில், தமிழ்நாட்டின் சாலை இமைப்புத் திட்டங்களுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் முன்னுரிமை வழங்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், பரமக்குடி-ராமநாதபுரம் இடையே 46.7 கி.மீ. தூர தேசிய நெடுஞ்சாலை எண் 87-ஐ நான்கு வழிச் சாலையாக மாற்றும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது.

ரூ.1,853 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் இந்த வழித்தட மேம்பாட்டு திட்டமானது, பயண நேரத்தை குறைத்து, பயணப் பாதுகாப்பை மேம்படுத்துவதுடன், தென் தமிழகத்தில், குறிப்பாக ராமேஸ்வரம் புனித யாத்திரைப் பகுதியில் சுற்றுலா மற்றும் வர்த்தகத்தை பெரிதும் ஊக்கப்படுத்தும்.

தமிழ்நாட்டின் சாலை இணைப்புத் திட்டங்களுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் முன்னுரிமை வழங்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

ரூ.1,853 கோடியில் பரமக்குடி - ராமநாதபுரம் நான்குவழிச் சாலைத் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Summary

ADMK General Secretary Edappadi K. Palaniswami has thanked Prime Minister Narendra Modi for prioritizing road connectivity projects and economic development in Tamil Nadu.

விளை நிலங்களுக்கு மத்தியில் வீட்டுமனைப் பிரிவுகள்: ராமதாஸ் கண்டனம்

ரியல் எஸ்டேட் என்ற பெயரில், விளை நிலங்களுக்கு மத்தியில் வீட்டுமனைப் பிரிவுகளை கட்டமைக்கும் வேலைகள் தொடங்கப்பட்டிருப்பது ஆபத்தான போக்கு. அது எந்நாளும் ஏற்புக்குரியது அல்ல என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவ... மேலும் பார்க்க

திருப்பதியில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

திருப்பதி: திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயில் அருகே உள்ள கடையில் நள்ளிரவு ஏற்பட்ட மின் கசிவால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது.ஆந்திரம் மாநிலம... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர்: நான்கு நாள்களுக்குப் பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடிக்கு கீழே குறைந்தது.காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை தணிந்ததால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரியின் வெள... மேலும் பார்க்க

மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவு

மியான்மரில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 அலகுகளாகப் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.தேசிய நில அதிர்வு மைய அறிக்கையின் படி, மியான்மரில் வ... மேலும் பார்க்க

பாலி தீவில் படகு கடலில் கவிழ்ந்து 43 பேர் மாயம்

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் ரிசார்ட் தீவான பாலி அருகே 65 பேருடன் சென்ற படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியானதாகவும், 43 பேர் மாயமாகி உள்ளதாக தேசிய தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் தெரிவித்... மேலும் பார்க்க

அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்: துணை முதல்வர்

வேலூர்: 30 சதவீத வாக்காளர்களை கழகத்தில் இணைக்க வேண்டும் என்ற கழகத் தலைவர் அவர்களின் ”ஓரணியில் தமிழ்நாடு” முன்னெடுப்பினை செயல்படுத்திட, திமுகவினர் அனைவரும் அரசினுடைய திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று ... மேலும் பார்க்க