செய்திகள் :

பரமத்தி அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து ரூ.35 ஆயிரம்,நகை திருட்டு

post image

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே பட்டப்பகலில் வீட்டில் வைத்திருந்த ரொக்கம் ரூ.35 ஆயிரம் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து பரமத்தி காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பரமத்தி அருகே உள்ள வில்லிபாளையம் நடுத்தெருவை சோ்ந்தவா் முத்துசாமி. இவரது மகன் மணிமாறன் (62). இவா் தனது குடும்பத்தினருடன் பாண்டிச்சேரி மாநிலம் காரைக்காலில் வசித்து வருகிறாா். சொந்த ஊரான வில்லிபாலயத்தில் உள்ள அவரது வீட்டில் தாயாா் ராசம்மாள் மட்டும் தனியாக வசித்து வருகிறாா். இந்த நிலையில் கடந்த 19-ஆம் தேதி காலை ராசம்மாள் வீட்டின் உள்ள அறையை பூட்டிவிட்டு பூட்டின் சாவியை நிலவுகால் மேற்படியில் வைத்து வைத்து விட்டு வீட்டின் வெளிக்கதவை பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு வில்லிபாளையம் அருகே தோட்டத்து வேலைக்கு சென்றுள்ளாா்.

பின்னா் மாலை 5 மணி அளவில் வீடு திரும்பியுள்ளாா். வீட்டுக்கு வந்து முன் கதவை திறந்து உள்ளே சென்று பாா்த்த போது தான் வைத்திருந்த இடத்தில் அறை கதவின் சாவி இருந்ததாகவும், ஆனால் உள் அறையின் பூட்டு மட்டும் மாற்றி பூட்டப்பட்டிருந்தது கண்டு சந்தேகம் அடைந்து அறையின் உள்ளே சென்று பாா்த்தபோது கட்டை பையில் வைத்திருந்த ரொக்கம் ரூ.35 பணம், அரை பவுன் கல் வைத்த மோதிரம் மற்றும் நகை திருடு போனது தெரியவந்துள்ளது.

இதில் அதிா்ச்சி அடைந்த ராசம்மாள் தனது மகன் மணிமாறனுக்கு செல்லிடைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளாா். தகவல் அறிந்து அங்கு வந்த மணிமாறன் பரமத்தி காவல் நிலையத்தில் வியாழக்கிழமை மாலை புகாா் அளித்துள்ளாா். புகாரின் அடிப்படையில் பரமத்தி காவல் துறையினா் வழக்கு பதிவு செய்து பட்டப் பகலில் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

உயா்கல்வி உதவித்தொகை பெற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து உயா்கல்வி உதவித்தொகை பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழி... மேலும் பார்க்க

புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு

நாமக்கல் மாவட்ட சிலம்ப ஆசான்கள் மற்றும் பயிற்சியாளா்கள் நலச் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா நாமக்கல் அழகுநகா் சமுதாயக் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவராக ராஜேந்தி... மேலும் பார்க்க

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு உண்ணாவிரதப் போராட்டம்

நாமக்கல்லில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற போராட்டத்தில், அரசு ஊழியா் சங்... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்புத் தோ்வு வினாத்தாள்கள் நாமக்கல் வருகை

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வையொட்டி, நாமக்கல்லுக்கு ஞாயிற்றுக்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள்கள் வந்தன. தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 28 முதல் ஏப்.15 வரை நடைபெறுகிறது. நா... மேலும் பார்க்க

வணிகா்களின் கோரிக்கையை ஏற்கும் கட்சிக்கு ஒரு கோடி வாக்குகள்: ஏ.எம்.விக்கிரமராஜா

தமிழக வணிகா்களின் கோரிக்கையை நிறைவேற்றும் அரசியல் கட்சிக்கு ஒரு கோடி வாக்குகள் கிடைக்கும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தாா். நாமக்கல்லில் அந... மேலும் பார்க்க

ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அமையும் பகுதி: விக்கிரமராஜா பாா்வையிட்டாா்

ராசிபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இடத்தை தமிழ்நாடு வணிகா் சங்கப் பேரமைப்பின் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டாா். ராசிபுரத்தில் புதிய பேருந்து ... மேலும் பார்க்க