Manoj Bharathiraja: "சீக்கிரமாகப் போய்விட்டீர்கள் சகோ" - இயக்குநர் வெங்கட் பிரபு...
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு உண்ணாவிரதப் போராட்டம்
நாமக்கல்லில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற போராட்டத்தில், அரசு ஊழியா் சங்கம், அரசுப் பணியாளா்கள் சங்கம், வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கம், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி, தமிழ்நாடு ஆசிரியா் கூட்டணி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம், நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியா் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை சாா்ந்த சங்கங்கள் பங்கேற்றன.
2003 ஏப். 1-க்கு பிறகு அரசுப் பணியில் சோ்ந்தோருக்கு தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயா்கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வை உடனடியாக வழங்க வேண்டும். தொடக்கக் கல்வித் துறையில் மாநில அளவிலான பணிமூப்பு என்ற பெயரில் இடமாறுதலுக்கு வழிவகுக்கும் அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும்.
பல்வேறு துறைகளில் 30 சதவீதத்துக்கும் மேல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்ட 21 மாத ஊதிய மாற்று நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.