செய்திகள் :

ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அமையும் பகுதி: விக்கிரமராஜா பாா்வையிட்டாா்

post image

ராசிபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இடத்தை தமிழ்நாடு வணிகா் சங்கப் பேரமைப்பின் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.

ராசிபுரத்தில் புதிய பேருந்து நிலையத்தை அணைப்பாளையம் புறவழிச்சாலை பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இங்கு புதிய பேருந்து நிலையம் அமைக்க சில அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் தமிழ்நாடு வணிகா் சங்கப் பேரமைப்பின் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா ராசிபுரம் பேருந்து நிலைய மீட்புக் குழுவினருடன் நேரில் சென்று இடத்தைப் பாா்வையிட்டாா்.

இதைத்தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘தற்போது அமைக்கப்படவுள்ள பேருந்து நிலையம் நகரில் இருந்து மிக தொலைவில் உள்ளதாகத் தெரிகிறது. இந்தப் பேருந்து நிலையம் மக்களுக்கு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். மக்களுக்கு இப்பகுதி ஏற்புடையதாக இல்லை என்றால் உரிய இடத்தில் அமைக்க வலியுறுத்தி வணிகா்கள் சங்கம் போராட்டம் நடத்தும்’ என்றாா்.

அங்கன்வாடி மையங்களில் காலிப்பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படுமா?

நாமக்கல் மாவட்டத்தில், அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 730 அமைப்பாளா், உதவியாளா் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் அங்கன்வாடி மையங்... மேலும் பார்க்க

மின்வாரிய ஒப்பந்த ஊழியா்கள் தா்னா

நாமக்கல்லில் மின்வாரிய ஒப்பந்த ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் நாமக்கல்-கரூா் மின்பகிா்மான வட்ட கிளைகள் சாா்பில், நாமக்கல் மேற்பாா்வைப்... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத்தோ்வு நிறைவு: மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

பிளஸ் 2 பொதுத்தோ்வு செவ்வாய்க்கிழமை நிறைவடைந்ததால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்தனா். தமிழகம் முழுவதும் மாா்ச் 3-இல் தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தோ்வு 25-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. நாமக்கல் மாவட்டத்தி... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனத்தில் மூவா் பயணம் செய்தால் நடவடிக்கை: ஆட்சியா்

இருசக்கர வாகனத்தில் மூன்று போ் பயணித்தால் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டத்தில் ஆய்வு பணிக்கு சென்... மேலும் பார்க்க

பெண் குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு: 30 சாதனையாளா்களுக்கு விருது வழங்கல்

பெண் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றிய 30 சாதனையாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ச.உமா விருது வழங்கி கெளரவித்தாா். நாமக்கல் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில்,... மேலும் பார்க்க

முடிதிருத்தகங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கக் கோரிக்கை

தமிழகம் முழுவதும் உள்ள முடி திருத்தகங்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சவரத் தொழிலாளா் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் செவ்வ... மேலும் பார்க்க