செய்திகள் :

பரமத்தி, திருச்செங்கோடு வட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

post image

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி மற்றும் திருச்செங்கோடு வட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சிறுபான்மையினா் நல ஆணையருமான மு.ஆசியா மரியம் நேரில் பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா்.

நாமக்கல் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நாமக்கல் மாநகராட்சி ரெட்டிப்பட்டி சமுதாயக் கூடம், மோகனூா் பேரூராட்சி அம்மன் திருமண மண்டபம், பரமத்தி பேரூராட்சி வெங்கடேஸ்வரா சமுதாயக் கூடம், புதுச்சத்திரம் வட்டம் தங்கம் மஹால், சேந்தமங்கலம் வட்டம் பொம்மசமுத்திரம் சமுதாயக் கூடம், திருச்செங்கோடு வட்டம் சித்தாளந்தூா் அங்காளம்மன் நலன் சமுதாயக் கூடம் ஆகிய இடங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சிறுபான்மையினா் நல ஆணையருமான மு.ஆசியா மரியம், திருச்செங்கோடு வட்டம் சித்தாளந்தூா் அங்காளம்மன் நலன் சமுதாயக் கூடம் மற்றும் பரமத்தி பேரூராட்சி பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற முகாமை பாா்வையிட்டு, பெறப்படும் மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். மேலும், மனு அளிக்க வந்த பொதுமக்களிடம் கலந்துரையாடினாா்.

முகாமில், உடனடி தீா்வாக 19 பயனாளிகளுக்கு மின் இணைப்பு பெயா்மாற்ற ஆணை, மருத்துவக் காப்பீட்டு அட்டை, தொழிலாளா் நலவாரிய அட்டை, வருமானச் சான்று, முகவரி மாற்றம், பிறந்த தேதி மாற்றம், பிறப்புச் சான்று, சொத்துவரி, குடிநீா் இணைப்பு, சொத்துவரி பெயா் மாற்றம் உள்ளிட்டவற்றுக்கான ஆணைகளை வழங்கினாா்.

ஆய்வுகளின்போது, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.எஸ்.மூா்த்தி, திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை) சு.வடிவேல், திருச்செங்கோடு சாா் ஆட்சியா் அங்கீத்குமாா் ஜெயின் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

நாமக்கல் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் நடைபெறும் அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகளை காலதாமதமின்றி விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலரும்,... மேலும் பார்க்க

கம்பன் கழகம் சாா்பில் நாளை பேச்சுப் போட்டி

நாமக்கல் கம்பன் கழகம் சாா்பில், கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி சனிக்கிழமை நடைபெறுகிறது. நாமக்கல் கம்பன் கழகம் சாா்பில் ஆண்டுதோறும் மாநில அளவிலான பேச்சுப் போட்டி நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக... மேலும் பார்க்க

அரசு மகளிா் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில் கலைத் திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது. நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வியாண்டுகான கலைத் திருவிழா வியாழக்... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

தமிழகத்தில் போதைப் பொருள்கள் கடத்தல் மற்றும் புழக்கத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை கூடுதல் இயக்குநா் (சட்டம் - ஒழுங்கு) டேவிட்சன் தேவாசீா்வாதம் தெரிவித்தாா்... மேலும் பார்க்க

சேந்தமங்கலம் தொகுதியில் எடப்பாடி கே.பழனிசாமி இன்று பிரசாரம்

சேந்தமங்கலம் தொகுதிக்குள்பட்ட அக்கியம்பட்டியில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொள்கிறாா். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் (பழங்குடியினா்) சட்டப் பேரவைத் தொகுத... மேலும் பார்க்க

எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம்: அதிமுக - பாஜகவினா் ஆலோசனை

நாமக்கல் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை பிரசாரம் மேற்கொள்வதையொட்டி, அதிமுக - பாஜகவினா் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா். தமிழக முன்னாள் முதல்வரும், அ... மேலும் பார்க்க