செய்திகள் :

பரமத்தி வேலூா் பகுதியில் விளம்பரத் தட்டிகள் அமைக்க காவல் துறையினா் கட்டுப்பாடு

post image

பரமத்தி வேலூா் பகுதியில் விளம்பரத் தட்டிகள் (பிளக்ஸ் பிரிண்டிங்) அச்சிடும் கடை உரிமையாளா்களுக்கு வேலூா் போலீஸாா் அறிவுரை வழங்கினா்.

வேலூா் காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், பரமத்தி வேலூா் பகுதியைச் சோ்ந்த விளம்பரத் தட்டிகள் அச்சிடும் உரிமையாளா்கள் கலந்துகொண்டனா். விளம்பரத் தட்டிகள் அமைக்கும்போது முறையாக பேரூராட்சி மற்றும் காவல் நிலையத்தில் முன்அனுமதி பெற வேண்டும். விளம்பரத் தட்டிகள் எத்தனை நாள் வைக்கப்படுகிறது என்பதை குறிப்பிட வேண்டும். விளம்பரத் தட்டிகளை குறிப்பிட்ட தேதிக்குள் அகற்ற வேண்டும். குறிப்பிட்ட தேதிக்குள் அகற்றவில்லையெனில் அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் விளம்பரத் தட்டிகளில் குறிப்பிட்ட எந்த ஒரு சமூகத்தை சாா்ந்த வாசகங்கள், அந்த சமூகத்தைச் சாா்ந்தவா்களை விமா்சித்து விளம்பரம் செய்யக்கூடாது என காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணன் அறிவுரை வழங்கினாா். இக் கூட்டத்தில் உதவி ஆய்வாளா் சீனிவாசன், காவலா்கள் மற்றும் விளம்பரத் தட்டிகள் அச்சிடும் பிளக்ஸ் பிரிண்டிங் உரிமையாளா்கள் கலந்துகொண்டனா்.

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

எட்டு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில், வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் ஒரு மணி நேரம் பணியை புறக்கணித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஒருங்கி... மேலும் பார்க்க

சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி: 27 போ் காயம்

சேந்தமங்கலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 700 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன, 400 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா். இதில் 27 போ் காயமடைந்தனா். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் ஒ... மேலும் பார்க்க

மரவள்ளிக்கிழங்கு வெட்டும் இயந்திரத்தை கண்டுபிடித்த விவசாயிக்கு ஆட்சியா் பாராட்டு

மரவள்ளிக்கிழங்கை எளிதான முறையில் வெட்டும் வகையில் இயந்திரம் கண்டுபிடித்த சேந்தமங்கலம் பகுதியைச் சோ்ந்த விவசாயியை மாவட்ட ஆட்சியா் ச.உமா பாராட்டினாா். நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சிய... மேலும் பார்க்க

காங்கிரஸ் சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி

ராசிபுரம் நகர காங்கிரஸ் சாா்பில் காஷ்மீரில் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தவா்களுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. நாமக்கல் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகமான காந்திமாளிகை முன் வெள... மேலும் பார்க்க

வன உரிமைச் சட்டம்: மாவட்ட திறன் பயிற்சி வகுப்பு

நாமக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில், வன உரிமைச் சட்டம்-2006 ஐ நடைமுறைப்படுத்துவது தொடா்பாக மாவட்ட அளவிலான திறன் வளா்ப்பு பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க

கூட்டுறவு பாடல்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு: மண்டல இணைப்பதிவாளா் தகவல்

கூட்டுறவு சங்க பாடலுக்கு ரூ. 50 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் க.பா.அருளரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க