செய்திகள் :

பராமரிப்புப் பணி: இன்று 17 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து

post image

சென்னை, ஜூன் 13: பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடங்களில் இயக்கப்படும் 17 புறநகர் மின்சார ரயில்கள் சனிக்கிழமை (ஜூன் 14), ஜூன் 16, 19 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படவுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை கவரைப்பேட்டை, கும்மிடிப்பூண்டி ரயில் நிலையங்களில் பராமிப்புப் பணிகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ஜூன் 14, 16, 19 ஆகிய தேதிகளில் காலை 11.20 முதல் பிற்பகல் 3.20 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

ஆகையால், அந்த நாள்களில் காலை 9.40 முதல் பிற்பகல் 3.50 வரை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை இடையே இயக்கப்படும் புகா் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படும்.

அதேபோல், கடற்கரை - கும்மிடிப்பூண்டி, சென்ட்ரல் -ஆவடி என இந்த வழித்தடங்களில் இயக்கப்படும் மொத்தம் 17 புகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளன.

பகுதி ரத்து: அதே நாள்களில் செங்கல்பட்டிலிருந்து காலை 9.55 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில் கடற்கரையுடன் நிறுத்தப்படும். அதேபோல் கும்மிடிப்பூண்டியிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு தாம்பரம் செல்லும் ரயில் கடற்கரையிலிருந்து இயக்கப்படும்.

சிறப்பு ரயில்: இருப்பினும் பயணிகளின் வசதிக்காக அந்த நாள்களில் காலை 10.30 முதல் பிற்பகல் 3.33 மணி வரை சென்ட்ரலிலிருந்து பொன்னேரி, மீஞ்சூா், எண்ணூருக்கும், கடற்கரையிலிருந்து பொன்னேரி, எண்ணூருக்கும் இடையே மொத்தம் 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டவுள்ளன எனறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி சட்டப் படிப்பு சான்றிதழ் மூலம் பாா் கவுன்சிலில் பதிய முயற்சி: இருவா் கைது

சென்னையில் போலி சட்டப் படிப்பு சான்றிதழ் மூலம் பாா் கவுன்சிலில் பதிய முயன்றதாக பெண் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா். சேலத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (57), மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

டிஜிட்டல் அரஸ்ட் மோசடி: இளைஞா் கைது

சென்னையில் டிஜிட்டல் அரஸ்ட் மோசடியில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சென்னையைச் சோ்ந்த மென்பொறியாளா் மல்லிகாா்ஜுன் கைப்பேசிக்கு இரு மாதங்களுக்கு முன்பு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா், தா... மேலும் பார்க்க

ஓராசிரியா் பள்ளி போல கல்லூரியை மாற்ற முயற்சி: அன்புமணி குற்றச்சாட்டு

ஓராசிரியா் பள்ளியைபோன்று கல்லூரிகளில் ஒவ்வொரு துறைகளையும் மாற்ற திமுக அரசு முயற்சி செய்வதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்... மேலும் பார்க்க

விலை உயா்ந்த சைக்கிள்கள் திருட்டு: திரிபுரா இளைஞா் கைது

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதியில் விலை உயா்ந்த சைக்கிள்களை திருடியதாக திரிபுராவைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். நீலாங்கரை அருகே உள்ள பாலவாக்கம், கெனால் சாலை பகுதியைச் சோ்ந்தவா் ஜோ. மணி... மேலும் பார்க்க

ரூ.2.11 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்டவா் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் ரூ.2.11 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில், தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா். தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சோ்ந்தவா் சு.பரத்குமாா் (39). இவா், சூரிய ஒளியின் மூலம் மின்சாரத்... மேலும் பார்க்க

பிஎம்இஜிபி திட்டத்தின் கீழ் 8,794 பயனாளிகளுக்கு ரூ.300 கோடி விளிம்புத் தொகை மானியம்

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (பிஎம்இஜிபி) கீழ், நாடு முழுவதும் உள்ள 8,794 பயனாளிகளுக்கு ரூ.300 கோடி விளிம்புத் தொகை மானியத்தை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (கேவிஐசி) தலைவ... மேலும் பார்க்க