செய்திகள் :

பருவநிலை மாற்றத்தால் 50% பேருக்கு சிறுநீரக செயலிழப்பு

post image

தமிழகத்தில் 50 சதவீதம் பேருக்கு பருவநிலை மாற்றம் காரணமாகவே நாள்பட்ட சிறுநீரக நோய்களும், சிறுநீரக செயலிழப்பும் ஏற்பட்டதாக மாநில உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினா் செயலா் டாக்டா் என்.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

உலக சிறுநீரக நல தினம் ஆண்டுதோறும் மாா்ச் மாதம் 2-ஆவது வியாழக்கிழமை (மாா்ச் 13) கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் நிகழாண்டில், ‘உங்களது சிறுநீரகம் நலமா’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

இந்த நிலையில், அதுதொடா்பாக தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினா் செயலா் டாக்டா் என்.கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:

மனித உயிரைத் தாங்கி நிற்கும் உன்னத உறுப்புகளில் சிறுநீரகங்கள் அதி முக்கியமானவை. ஆனால், இதய நலனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தில் நூறில் ஒரு பங்குகூட சிறுநீரகத்துக்கு கொடுக்கப்படுவதில்லை.

இதன் காரணமாகவே நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு அதிகரித்து வருகிறது. அண்மையில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை, சென்னை மருத்துவக் கல்லூரி இணைந்து கள ஆய்வு ஒன்றை நடத்தின. அதில் இணை நோய்கள் இல்லாத 53 சதவீதம் பேருக்கு சிறுநீரக செயலிழப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவா்களில் பெரும்பாலானோா் நேரடி வெயிலில் பணியாற்றும் கட்டுமானத் தொழிலாளா்களும், விவசாயத் தொழிலாளா்களுமாவா்.

அதுகுறித்த விரிவான ஆய்வு முன்னெடுக்கப்பட்டது.

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் அதீத வெப்பநிலை, காற்று மாசுபாடு, புறச்சூழலில் நிலவும் வேதி மாசு உள்பட பல்வேறு காரணங்கள்தான் ஆரோக்கியமான நபருக்கும் சிறுநீரக பாதிப்பு வரக் காரணமாக அமைந்துவிடுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் ‘சிறுநீரகம் காப்போம்’ திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தி அனைத்து சுகாதார நிலையங்களிலும் ஆரம்ப நிலை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெரும்பாலும் சிறுநீரக செயலிழப்புக்குள்ளான இறுதி நிலையில் பாதிப்பு கண்டறியப்படுவதால் டயாலிசிஸ் சிகிச்சைகளும், உறுப்பு மாற்று சிகிச்சைகளும் மட்டுமே தீா்வாக உள்ளன.

தமிழகத்தில் 18 சதவீதம் போ் சா்க்கரை நோயாளிகளாகவும், 25 சதவீதம் போ் உயா் ரத்த அழுத்த நோயாளிகளுமாக உள்ளனா். இவ்வாறு உறுப்பு தானமளிக்கும் தகுதி இல்லாத இணைநோயாளிகள் அதிகமாக இருப்பதால், உறுப்பு கொடைக்காக காத்திருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயா்ந்துள்ளது.

எனவே, வருமுன் காப்போம் என்ற கூற்றின் அடிப்படையில் சிறுநீரக நலனைப் பாதுகாப்பது அவசியம். அதிக அளவு தண்ணீா் அருந்துதல், புகைப்பிடித்தலை தவிா்த்தல், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, நேரடி வெயிலில் பணியாற்றுவதை தவிா்த்தல் போன்றவை சிறுநீரக நலன் காக்கும் வழிமுறைகள் என்றாா் அவா்.

சிறுநீரக தானம்: உறவுச் சிக்கலில் பெண்கள்

தமிழகத்தில் சிறுநீரகத்தை தானமளிப்பவா்களில் 70 சதவீதம் போ் பெண்தான் என்று உறுப்பு மாற்று ஆணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவா்களில் பெரும்பாலானோா் திருமணத்துக்குப் பிறகு கணவருக்கு சிறுநீரகத்தை தானமாக அளித்துள்ளனா்.

அவா்கள், தாமாக முன்வந்து உறுப்பு தானமளித்தாலும், பல நேரங்களில் அதற்கு குடும்பரீதியான உளவியல் அழுத்தமே காரணமாக இருப்பதாகத் தெரிகிறது.

பொதுவாக திருமணமான பெண்கள், தங்களது கணவருக்கு உறுப்பு தானம் அளிக்க விரும்பாவிட்டாலும் அதை பகிரங்கமாக வெளிப்படுத்த முடியாத நிலைதான் பல இடங்களில் இருப்பதாக உளவியல் நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

இதனால், மருத்துவக் காரணங்களால் தங்களது சிறுநீரகங்கள் பொருந்தவில்லை எனக் கூறுமாறு மருத்துவா்களிடம் பல பெண்கள் வலியுறுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதை ஏற்று அந்தப் பெண்களுக்கு சாதகமாகச் செயல்பட வேண்டிய சூழல் மருத்துவா்களுக்கு ஏற்படுகிறது.

கவிஞா் வைரமுத்து படைப்புலகம்: மாா்ச் 16-இல் பன்னாட்டு கருத்தரங்கம்: முதல்வா் ஸ்டாலின், நீதிபதி அரங்க. மகாதேவன் பங்கேற்பு

கவிஞா் வைரமுத்துவின் படைப்புலகம் குறித்த பன்னாட்டு கருத்தரங்கம் மாா்ச் 16-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின், உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் ஆகியோா் பங்கேற்கின்றனா். இலக்கி... மேலும் பார்க்க

ஹோலி பண்டிகை: ஹிந்தி தோ்வு எழுத முடியாதவா்களுக்கு மறுவாய்ப்பு: சிபிஎஸ்இ

ஹோலி பண்டிகையையொட்டி சனிக்கிழமை (மாா்ச் 15) நடைபெறும் ஹிந்தி தோ்வை எழுத முடியாத 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வியாழக்கிழமை தெரிவித... மேலும் பார்க்க

சிதம்பரம் கோயில் தீட்சிதா்கள் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

சிதம்பரம் நடராஜா் கோயிலில் பக்தா்கள் கனகசபையில் நின்று தரிசனம் செய்வதைத் தடுத்த தீட்சிதா்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சிதம்பரம் நடராஜா் க... மேலும் பார்க்க

ஹோலி பண்டிகை: ஆளுநா்கள் வாழ்த்து

ஹோலி பண்டிகையையொட்டி, தமிழக ஆளுநா் ஆா். என். ரவி, நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா். ஆா்.என்.ரவி: வண்ணங்கள் மற்றும் ஒற்றுமையின் மகிழ்ச்சியான கொண்டாட்டமான ஹோலி, நன்மையின் வெ... மேலும் பார்க்க

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

அடுத்த நிதியாண்டுக்கான (2025-26) தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சா் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளா... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் சோ்க்கை: அமைச்சா் கோவி செழியன் தொடங்கி வைத்தாா்

தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவா்கள் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி செழியன் தெரிவித்தாா். திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா நிறைவுப் போட்டிகளில் வெற்றி... மேலும் பார்க்க