செய்திகள் :

பருவமழை பேரழிவில் ஹிமாசல்: 386 பேர் பலி, 574 சாலைகள் மூடல்!

post image

ஹிமாசலப் பிரதேசத்தைப் புரட்டிபோட்ட பருவமழை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அங்குப் பலி எண்ணிக்கை 386 ஆக உயர்ந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

பருவமழை தொடங்கியதில் இருந்து ஹிமாசல் மாநிலம் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றது. தொடர் மழை வெள்ளம் காரணமாக பலர் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநில அவசரக்கால செயல்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இன்று காலை நிலவரப்படி, மொத்தம் 574 சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன. 389 விநியோக மின்மாற்றிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மழை மற்றும் நிலச்சரிவுகளைத் தொடர்ந்து 333 நீர் வழங்கல் திட்டங்கள் செயலிழந்துள்ளன.

ஜூன் 20 முதல் இந்தாண்டு பருவமழைக்குப் பலியானோர் எண்ணிக்கை 386 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் திடீர் வெள்ளம் நிலச்சரிவுகள், வீடுகள் இடிந்து விழுதல், நீரில் மூழ்குதல் உள்ளிட்ட காரணங்களால் 218 பேரும், சாலை விபத்துகளில் 168 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக குலு 174 சாலைகளும், மண்டியில் 166 சாலைகளும் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது. சிம்லா மாவட்டத்தில் 48 சாலைகள், காங்க்ராவில் 45, சம்பாவில் 44 மற்றும் சிர்மௌரில் 28 சாலைகள் மூடப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலை -03 (மனாலி-கீலாங்), தேசிய நெடுஞ்சாலை -305 (அன்னி-ஜலோரி) மற்றும் தேசிய நெடுஞ்சாலை-503A (உனா பகுதி) உள்ளிட்ட முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. உயரமான பள்ளத்தாக்குகள் மற்றும் சுற்றுலா மையங்களுக்கான இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பொதுப்பணித் துறை, மாநில மின்சார வாரியம், ஜல் சக்தித் துறை ஆகிய குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், தொடர்ச்சியான மழை மற்றும் புதிய நிலச்சரிவுகள் சீரமைப்பு பணிகளுக்கு இடையூரை விளைவித்து வருகின்றன.

செப்டம்பர் கடைசி வாரம் வரை பருவமழைக்கான அறிகுறிகள் இருப்பதால் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு மக்களைப் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Himachal Pradesh continues to reel under the impact of an unforgiving monsoon, with the State Disaster Management Authority (SDMA) on Saturday confirming massive disruption to public utilities across the state.

இதையும் படிக்க: தமிழ் தலைவாஸ் அபார வெற்றி: புள்ளிப் பட்டியலில் 4 இடங்கள் முன்னேற்றம்!

மணிப்பூர் மக்களுக்கு மத்திய அரசு ஆதரவு! பிரதமர் மோடி உறுதி!

மணிப்பூர் மக்களுக்கு மத்திய அரசின் ஆதரவு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.மணிப்பூரில் வெடித்த இன மோதலைத் தொடர்ந்து, பெரும் இடைவெளிக்குப்பின் இன்று (செப். 13) அங்கு சென்றுள்ள பிரதமர் நரேந்த... மேலும் பார்க்க

யானை திருடு போய்விட்டது: ஜார்க்கண்டில் போலீஸில் புகார்

யானை திருடு போய்விட்டதாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் வழக்கு பதிவு செய்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் மிர்சாபூரைச் சேர்ந்த நரேந்திர குமார் சுக்லா என்ற நபர் ஜார்க்கண்டின் காவல் நிலையத்தில் வெள்ள... மேலும் பார்க்க

மணிப்பூரில் அரைநாள் பயணம் முடிந்தது! அஸ்ஸாமில் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி இன்று(செப். 13) மாலை அஸ்ஸாம் தலைநகர் குவாஹாட்டிக்குச் சென்றடைந்தார்.மணிப்பூா் பயணத்தை முடித்துக் கொண்டு அஸ்ஸாம் சென்றுள்ள பிரதமா் மோடி, ஞாயிற்றுக்கிழமை (செப்.14) வரை அங்கு பல்வேற... மேலும் பார்க்க

ம.பி. முதல்வர் சென்ற வெப்ப காற்று பலூனில் திடீர் தீ !

மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் சென்ற வெப்ப காற்று பலூன் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் மந்தசௌர் பகுதியில் உள்ள காந்தி சாகர் வனப்பகுதியில் வெப்ப ... மேலும் பார்க்க

சிமெண்ட், கட்டுமானப் பொருள்கள் விலை குறையப்போகிறது: மணிப்பூரில் மோடி!

மணிப்பூரில் வெடித்த இன மோதலைத் தொடர்ந்து, பெரும் இடைவெளிக்குப்பின் இன்று (செப். 13) அங்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி மக்கள் மத்தியில் உரையாற்றினார். மணிப்பூர் தலைநகர் இம்பால் நகரில் அவர் பேசுகையி... மேலும் பார்க்க

மதுராவில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை கண்டுபிடிப்பு

மதுராவில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலையை தில்லி போலீஸார் கண்டறிந்து ஒருவரை கைது செய்தனர். உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள யமுனை நதிக்கு அருகே செயல்பட்டு வந்த சட்டவிரோத ஆயுத தொழிற்சாலையை தில்லி போலீ... மேலும் பார்க்க