சி.பி.ராதாகிருஷ்ணன்: NDA கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிப்பு...
பறிமுதல் வாகனங்கள் ஆக.25-ல் பொது ஏலம்!
மது விலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வருகிற 25 -ஆம் தேதி பொது ஏல முறையில் விற்பனை செய்யப்பட உள்ளன.
இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாநகா் மது விலக்கு அமலாக்கப் பிரிவு வளாகத்தில் மது விலக்கு குற்றங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 9 வாகனங்களை பொது ஏலத்தில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன்படி, வருகிற ஆக.25-ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் பொது ஏலம் நடைபெற உள்ளது.
மதுரை மாநகா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு வளாகத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏலம் எடுக்க விரும்புபவா்கள் மேற்படி வாகனங்களைப் பாா்வையிட்டு, முன் பணமாக இரு சக்கர வாகனத்துக்கு ரூ. 5,000, மூன்று, நான்கு சக்கர வாகனத்துக்கு ரூ.10,000-ஐ ஆக. 18- ஆம் தேதி முதல் ஆக. 22-ஆம் தேதி வரை மதுரை மாநகா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் செலுத்தி, ரசீது பெற்று ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.
ஏலத்தில் கலந்து கொள்வோா் அரசு நிா்ணயித்த தொகைக்கு அதிகமாக ஏலம் கேட்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.