செய்திகள் :

பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் தொடர்பாக சட்டமன்றத்தில் மசோதா; காவல்துறைக்கு புதிய அறிவிப்புகள்!

post image

தமிழக அரசின் பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காத வழக்கில், ஏப்ரல் 8-ம் தேதி உச்ச நீதிமன்றம் ஒரு அதிரடி தீர்ப்பை அளித்தது.

அந்தத் தீர்ப்பில், ஆளுநரின் செயல்பாடுகளைக் கண்டித்து, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கால வரம்பு நிர்ணயித்த உச்ச நீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 142 தனக்கு அளித்திருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதலும் அளித்தது.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இந்த நிலையில், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்துக்குத் துணை வேந்தர் நியமனம், நீக்கம் அதிகாரத்தை அரசுக்கு அளிக்கும் மசோதா இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. `2025-ம் ஆண்டு, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக திருத்தச் சட்டம்' என்ற மசோதாவைத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார். தொடர்ந்து, அது நிறைவேற்றப்பட்டது.

மேலும், சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை விவாதத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் காவல்துறை குறித்து உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், "சட்டம் ஒழுங்கு சீராகவும் தமிழ்நாடு அமைதி மிகு மாநிலமாக இருப்பதனால்தான் பெரிய அளவிலான சாதி சண்டை, மதக் கலவரங்கள், வன்முறைகள் இங்கு இல்லை. இதெல்லாம் நடந்தால்தான் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று புழுதி வாரித் தூற்ற முடியும். ஏதாவது ஒரு சில இடத்தில் கவனக் குறைவாக சில தவறுகள் நடந்திருந்தால் கூட உடனடியாக அதைத் திருத்திக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

உள்நோக்கத்தோடு, அரசியல் ஆதாயத்திற்காகத் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பேசுகிறவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன், இது மணிப்பூர் அல்ல, காஷ்மீர் அல்ல. உத்தரப்பிரதேச கும்பமேளா மரணங்கள் இங்கு நடக்கவில்லை, இது தமிழ்நாடு. அதை மறந்து விடாதீர்கள்.

குற்றங்களைக் குறைக்கின்ற துறையாக மட்டும் இல்லாமல் குற்றங்களைத் தடுக்கின்ற துறையாக காவல்துறை செயல்பட வேண்டும். அதற்கு காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டால் மட்டும் போதாது ஒட்டுமொத்த சமூகமும் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும்.

சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பு. எனவே, அனைவரும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். சுய ஒழுக்கத்தோடு எல்லோரும் இருக்க வேண்டும். காவல்துறையினரும் பொதுமக்களிடத்தில் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்." என்று கூறி, காவல்துறைக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

காவல்துறைக்கான அறிவிப்புகள்:

* காவலர்களுக்கு என தனி நாளை கொண்டாடுவதற்காக, செப்டம்பர் 6-ம் நாள் இனி ஆண்டுதோறும் காவலர்கள் நாளாகக் கொண்டாடப்படும்.

* காவல்துறையின் செய்தி மற்றும் ஊடகத்துறையை நிர்வகிக்கும் பொருட்டு புதிதாக ஒரு காவல் கண்காணிப்பாளர் பதவி உருவாக்கப்படும்.

* சென்னை ஆவடி மற்றும் தாம்பரம் மாநகரங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்ட, மாநகரங்களிலும் பிரத்யேக சமூக ஊடக மையங்கள் உருவாக்கப்படும்.

தமிழக காவல்துறை

* சென்னை ஆயுதப்படையில் புதிய பணியிடங்களும், 250 காவல் ஆய்வாளர்கள் பணியிடங்களும் உருவாக்கப்படும்.

* உதகை மற்றும் தருமபுரியில் ரூ.101 கோடியில் ஆயுதப்படை காவல் குடியிருப்புகள் கட்டப்படும்.

* காவல்துறைக்கு 350 நான்கு சக்கர வாகனங்களும் 50 நடமாடும் தடயவியல் வாகனமும் வழங்கப்படும்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

``தீவிரவாதிகள் செய்த தவறுக்கு நாங்கள் ஏன் தண்டிக்கப்படுகிறோம்?'' - பாகிஸ்தானியர்கள் கேள்வி

ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் ந... மேலும் பார்க்க

Canada: தேர்தலில் வெற்றி பெற்ற ட்ரூடோவின் கட்சி; ஆட்சிக்கு வரும் கார்னி! - காத்திருக்கும் சாவல்கள்

நாடு முழுவதும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் கிளம்ப...2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் 6-ம் தேதி, தனது கனடா பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ஜஸ்டின் ட்ரூடோ. 2015-ம் ஆண்டில் பிரதமராக பதவியேற்றப் போது, இவர் த... மேலும் பார்க்க

``இணைப்பு சாலை இல்லாத பாலம்.. போராடி வாங்கியும் தினமும் திண்டாட்டம் தான்..'' - குமுறும் மக்கள்

சேலம் மாவட்டம் போடிநாயக்கன்பட்டி மற்றும் அதை சுற்றி பல கிராமங்களில் 50 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 2007 காலகட்டத்தில், இந்த பகுதியில் ரயில்வே பாலத்துக்கு கீழே ஒரு நபர் மட்டும் சென்று வரும... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஒருநாளைக்கு எவ்வளவு பால் குடிக்கலாம்.. பால் குடித்தால் உடல் எடை கூடுமா?

Doctor Vikatan: சராசரி நபர் ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கலாம்... குறிப்பாக, பெண்கள் எவ்வளவு பால் குடிக்கலாம்... பால் குடித்தால் வெயிட் அதிகரிக்குமா... சைவ உணவுக்காரர்கள்கால்சியம் தேவைக்கு பாலையே ந... மேலும் பார்க்க

``அது நடந்தால் நாங்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம்'' - பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர்

'இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே போர் வந்துவிடுமா?' - ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, உலகம் முழுக்க இருக்கும் பரபர கேள்வி இது.'தக்க நடவடிக்கைகள் எடுப்போம்' என்று இந்தியா அடுத்தடுத... மேலும் பார்க்க