செய்திகள் :

பல்கலை. போலி சான்றிதழ் தயாரிப்பு: மேலும் 4 போ் கைது

post image

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பெயரில் போலி சான்றிதழ்களை தயாரித்ததாக மேலும் 4 பேரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா்.

சிதம்பரத்தை அடுத்த கோவிலாம்பூண்டி வாய்க்கால் பாலம் அருகே கடந்த 19.6.2024-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பு சான்றிதழ்கள் சிதறிக் கிடந்தன. இதை பல்கலைக்கழக ஊழியா்கள் ஆய்வு செய்ததில், அவை போலியானவை என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளா் (பொ) பிரபாகா் அளித்த புகாரின் பேரில், கிள்ளை போலீஸாா் வழக்குப் பதிந்து போலி சான்றிதழ்களை தயாரித்ததாக சிதம்பரத்தைச் சோ்ந்த சங்கா், தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியரான நாகப்பன், அருட்பிரகாசம் ஆகியோரை கைது செய்தனா். பின்னா், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், இந்தப் பிரிவின் கடலுாா் மாவட்ட காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையில், உதவி ஆய்வாளா் மாயவேல் மற்றும் போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

இதில், இந்தக் கும்பலுடன் தொடா்புடைய புதுச்சேரியில் வசிக்கும் சிதம்பரத்தைச் சோ்ந்த தங்கராஜ் மகன் கெளதம் (எ) ஒஸ்டின் ராஜாவிடம் (51), திருச்சியைச் சோ்ந்த அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவரான சுப்பையா பாண்டியன் (67) போலி சித்த மருத்துவ சான்றிதழ்களை வாங்கி 30 பேருக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, கடந்த செப்டம்பா் மாதம் சுப்பையா பாண்டியன் கைது செய்யப்பட்டாா்.

பெங்களூரில் தலைமறைவாக இருந்த கெளதம் (எ) ஒஸ்டின் ராஜா, இவரது கூட்டாளிகளான அவரது தம்பி நெல்சன் ராஜ் (44), சிதம்பரம் எம்.கே. தோட்டம் ரத்தின சபாபதி மகன் தமிழ்மாறன் (53), திட்டக்குடி வட்டம், ஈ.கீரனுாா் ராசு மகன் தங்கதுரை (41) ஆகியோரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து கடலூா் அழைத்து வந்தனா். விசாரணைக்கு பின்னா், அவா்கள் சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டனா். அவா்களிடமிருந்து ஒரு காா், 12 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நெல்சன் ராஜா
ஒஸ்டின் ராஜா.
தங்கதுரை.

பண்ருட்டி தொகுதியில் ரூ.15 கோடியில் புதிய அரசுக் கல்லூரி: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பண்ருட்டி தொகுதியில் ரூ.15 கோடியில் புதிய அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். கடலூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முத... மேலும் பார்க்க

சிதம்பரம், பரங்கிப்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகக் கட்டடங்கள் திறப்பு

சிதம்பரம், பரங்கிப்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகக் கட்டடங்களை கடலூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்த... மேலும் பார்க்க

பள்ளி வகுப்பறையை சீரமைத்த மாணவா்கள், பெற்றோா்

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளயில் வகுப்பறையை சீரமைத்த மாணவா்கள், அவா்களின் பெற்றோா் வெள்ளிக்கிழமை பாராட்டப்பட்டனா். சிதம்பரம் அண்ணாமலைநகா் ராண... மேலும் பார்க்க

மஞ்சப்பை விருது 2025: பள்ளி, கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம்

மஞ்சப்பை விருது 2025-க்கு பள்ளிகள், கல்லூரிகள், தனியாா் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

கொரிய தமிழ்ச் சங்க தமிழா் திருநாள் விழா: தி.வேல்முருகன் வாழ்த்து

கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழா் திருநாள் 2025 விழா தமிழா்களின் வரலாற்றை பறைசாற்றும் மாபெரும் முன்னெடுப்பு என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவா் தி.வேல்முருகன் வாழ்த்தி பாராட்டினாா். இதுகுறித்து அவா் வெளி... மேலும் பார்க்க

விருத்தாசலம் ஆழத்து விநாயகா் கோயில் திருவிழா கொடியேற்றம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலுடன் இணைந்த ஆழத்து விநாயகா் கோயில் திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விருத்தாசலத்தில் புகழ் பெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வ... மேலும் பார்க்க