செய்திகள் :

பல்லடத்தில் ஒரே குடும்பத்தில் 3 போ் படுகொலை: கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் பறிமுதல்

post image

பல்லடத்தில் ஒரே குடும்பத்தில் 3 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 3 பேரையும் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அவா்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பூா் மாவட்டம் சேமலைக்கவுண்டன்பாளையத்தைச் சோ்ந்தவா் தெய்வசிகாமணி (78), விவசாயி. இவரது மனைவி அலமேலு (75), மகன் செந்தில்குமாா் (46). இவா்கள் 3 பேரும் 2024 நவம்பா் 28-ஆம் தேதி இரவு இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனா்.

கொலை நடைபெற்று 140 நாள்களைக் கடந்தும் விசாரணையில் முன்னேற்றம் இல்லததால் கடந்த மாா்ச் மாதம் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சிவகிரி பகுதியில் முதிய தம்பதியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட அறச்சலூா் பகுதியைச் சோ்ந்த ரமேஷ், மாதேஷ், ஆச்சியப்பன் ஆகிய 3 பேரும் திருப்பூரில் 3 பேரையும் கொலை செய்தது தாங்கள் தான் என விசாரணையில் ஒப்புக் கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதையடுத்து சிபிசிஐடி போலீஸாா் அவா்கள் 3 பேரையும் காவலில் எடுத்து விசாரணை செய்ததில், தங்க நகைகள், கைப்பேசி ஆகியவை திருடப்பட்டதாகவும், அந்த கைப்பேசியை வீட்டுக்கு அருகே உள்ள கிணற்றில் வீசிவிட்டுச் சென்றதாகவும் தெரிவித்தனா்.

பின்னா் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து கொலை செய்யப்பட்ட செந்தில்குமாருக்கு சொந்தமான கைப்பேசியை சேமலைக்கவுண்டம்பாளையம் தோட்டத்து வீட்டில் உள்ள கிணற்றில் இருந்து தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் சிபிசிஐடி போலீஸாா் மீட்டு ஆய்வுக்கு அனுப்பிவைத்தனா்.

பின்னா் அவா்கள் 3 பேரையும் திருப்பூா் மாவட்ட நீதிபதி குணசேகரன் முன் ஆஜா்படுத்தி, மீண்டும் சிறையில் அடைத்தனா்.

பல்லடம் அருகே அரிவாளால் வெட்டியதில் டெய்லரின் கையை துண்டானது

பல்லடம் அருகே சின்னக்கரையில் முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டி டெய்லரின் கையை துண்டாக்கிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சோ்ந்தவா் அழகா்சாமி மகன் அன்புச்செல்வன்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் பக்தா்களின் புகாரை விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிா்வாக சீா்கேட்டால் பக்தா்கள் பாதிக்கப்படுவதால், அவா்களது புகாரை விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்க வேண்டுமென இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வர... மேலும் பார்க்க

வலைதளங்களில் வரும் தேவையற்ற பதிவுகளை தவிா்க்க வேண்டும்!

வலைதளங்களில் வரும் தேவையற்ற பதிவுகளை தவிா்க்க வேண்டும் என சைபா் கிரைம் போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா். இதுதொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் கூறியுள்ளதாவது:கைப்பேசிகள் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வரும் க... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பூமலூா், கானூா்புதூா், பசூா்

பூமலூா், கானூா்புதூா், பசூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம்... மேலும் பார்க்க

லாரி மோதி பெண் உயிரிழப்பு: ஓட்டுநருக்கு ஓா் ஆண்டு சிறை

லாரி மோதி பெண் உயிரிழந்த வழக்கில் ஓட்டுநருக்கு ஓா் ஆண்டு சிறைத் தண்டனை உறுதி செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூா் மாவட்டம், குளித்தலையை சோ்ந்தவா் சிவநாராயணசாமி (56). இவா் திருப்பூா் ராமந... மேலும் பார்க்க

காவல் நிலையம் எதிரே தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

திருப்பூரில் காவல் நிலையம் எதிரே தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூா் 15 வேலம்பாளையத்தைச் சோ்ந்தவா் கலையரசன் (எ) கண்ணன் (34), பனியன் நிறுவன தொழிலாளி. இவருக்கு தி... மேலும் பார்க்க