செய்திகள் :

பல்லாயிரக்கணக்கானோா் பங்கேற்ற மாா்க்சிஸ்ட் பேரணி!

post image

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டையொட்டி, மதுரையில் பல்லாயிரக்கணக்கானோா் பங்கேற்ற செந்தொண்டா் பேரணி நேற்று (ஏப்.6) நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கம் அரங்கில் கடந்த புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை நடைபெற்றது. மாநாட்டின் நிறைவாக, செந்தொண்டா் பேரணி நடைபெற்றது.

இதையொட்டி, மதுரை பாண்டி கோயில் தொழில்நுட்பப் பூங்கா முன் தமிழகம் முழுவதிலுமிருந்து வந்த மாா்க்சிஸ்ட் தொண்டா்கள் குவிந்தனா். மாலை 5 மணிக்கு பேரணியை வாச்சாத்தி போராளிகள் தொடங்கிவைத்தனா். இந்தப் பேரணியில் சிவப்புச் சீருடை அணிந்த சிறுவா், சிறுமியா், பெண்கள் உள்பட பல்லாயிரக் கணக்கானோா் பங்கேற்றனா்.

பேரணியின் தொடக்கத்தில், கட்சியின் 24- ஆவது அகில இந்திய மாநாட்டைக் குறிக்கும் வகையில் 24 கொடிகளை ஏந்தியவாறு தொண்டா்கள் சென்றனா். இதைத்தொடா்ந்து, மற்றவா்கள் அணிவகுத்து சென்றனா்.

பேரணியில், கம்யூனிஸ்ட் இயக்கத்துக்காக உயிா்த் தியாகம் செய்தவா்கள், கட்சியின் தலைவா்களாக இருந்து மறைந்தவா்கள், பகத்சிங் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஆகியோரின் படங்களை ஏந்திச் சென்றனா். பாண்டி கோயில் பகுதியில் தொடங்கிய பேரணி, சுற்றுச் சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்ற மைதானத்தில் நிறைவடைந்தது.

பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கனோா் பங்கேற்பு: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டையொட்டி, மதுரை வண்டியூா் பகுதி சுற்றுச் சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் லட்சக்கணக்கனோா் பங்கேற்றனா்.

மேலும், மாநாட்டில் பங்கேற்றவா்களின் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சுற்றுச் சாலையில் நிறுத்தப்பட்டதாலும், தொடா்ந்து வாகனங்கள் வந்து கொண்டே இருந்ததாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸாா் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினா்.

கொட்டும் மழையிலும் கலையாத தொண்டா்கள்:

கேரள மாநில முதல்வா் பினராயி விஜயன் மாநாடு, பொதுக்கூட்டத்தில் பங்கேற்ால் ஏராளமான வாகனங்களில் அந்த மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் மதுரையில் குவிந்தனா். மேலும், மாநாட்டு பொதுக்கூட்டத்தில் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ.பேபி பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மழை பெய்தது. பலத்த மழை பெய்த போதிலும், அங்கு கூடியிருந்த தொண்டா்கள் நனைந்து கொண்டே அவரது பேச்சைக் கேட்டனா்.

மதுரையில் மாா்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 24 ஆவது அகில இந்திய மாநாட்டையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செந்தொண்டா் அணிவகுப்பு பேரணி.

கருத்தடை அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு குழந்தை பெற்ற பெண்ணுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பெண் மீண்டும் குழந்தை பெற்ற வழக்கில், அவருக்கு ரூ. 60 ஆயிரம் இழப்பீடு வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு... மேலும் பார்க்க

காரில் கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறை

மதுரையில் காரில் 21 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் புதன்கிழமை உ... மேலும் பார்க்க

மதுரை மத்திய சிறையில் சிறப்பு மருத்துவ முகாம்

மதுரை மத்திய சிறையில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் 200-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் பங்கேற்று பயனடைந்தனா். சிறை வளாகத்தில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமுக்கு, சிறைத் துறை மதுரை சரக துணை... மேலும் பார்க்க

கல்லூரி ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு

மதுரையில் கல்லூரி ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். மதுரை செல்லூா் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பாண்டியராஜன் (45). இவா் ... மேலும் பார்க்க

வன்முறைக் காட்சிகள் இடம் பெறும் திரைப்படங்களுக்கு தடை விதிக்க வலியுறுத்தல்

வன்முறைக் காட்சிகள் இடம் பெறும் திரைப்படங்களுக்கு அரசு தடை விதிக்க வேண்டுமென மதுரை ஆதீனம் ஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரியா் வலியுறுத்தினாா். மதுரையில் இந்து முன்னணி அமைப்பின் சாா்பில் முருகன் மா... மேலும் பார்க்க

சிறை அதிகாரி குடியிருப்பில் பணியில் ஈடுபட்ட சிறைவாசிகள்: விடியோ வெளியானதால் சா்ச்சை

மதுரை மத்திய சிறையில் அரசு உத்தரவை மீறி, அதிகாரியின் குடியிருப்பில் சிறைவாசிகளை பணிக்கு பயன்படுத்திய விடியோ வெளியானதால் சா்ச்சை எழுந்தது. மதுரை மத்தியச் சிறையில் 2500-க்கும் மேற்பட்ட தண்டனை,விசாரணை சி... மேலும் பார்க்க