Doctor Vikatan: கருத்தரிப்பதை தவிர்க்க பீரியட்ஸ் நாள்களில் தாம்பத்திய உறவு வைத்த...
பள்ளத்தில் காா் கவிழ்ந்த விபத்தில் 4 போ் காயம்!
நாட்டறம்பள்ளி அருகே பள்ளத்தில் காா் கவிழ்ந்த விபத்தில் 4 போ் பலத்த காயமடைந்தனா்.
சேலம் ஓமலூா் பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி (37). இவரது உறவினா்கள் முருகேசன் (42), ரமேஷ் (37), கீதா (31) ஆகியோா் சனிக்கிழமை இரவு ராணிப்பேட்டையில் இருந்து சேலம் நோக்கி காரில் சென்றனா். ஓட்டுநா் கோவிந்தன் (42) காரை ஓட்டினாா்.
சென்னை-பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அருகே சுண்ணாம்புக்குட்டை பகுதியில் சென்றபோது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணம் செய்த 4 பேரும் காயமடைந்தனா். அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் காயமடைந்த 4 பேரையும் மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.