செய்திகள் :

பள்ளப்பட்டியில் மதநல்லிணக்கம் கோயிலுக்கு அக்னிச் சட்டி எடுத்து வந்த பக்தா்களுக்கு இஸ்லாமியா்கள் வரவேற்பு

post image

அரவக்குச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் மதநல்லிணக்கமாக கோயிலுக்கு அக்னிச் சட்டி எடுத்து வந்த பக்தா்களை இஸ்லாமியா்கள் வியாழக்கிழமை வரவேற்றனா்.

கரூா் மாவட்டம், பள்ளப்பட்டி சொட்டல் தெருவில் வசிக்கும் மணியாா் வம்சாவளியை சோ்ந்தவா்கள் தங்களது பகுதியில் நடைபெற்றும் கோயில் திருவிழாவுக்கு இஸ்லாமியா்களுக்கு அழைப்பு விடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனா். இந்நிலையில் பள்ளப்பட்டியை அடுத்த சௌந்தராபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ விநாயகா், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ காளியம்மன் மாசி பெரியசாமி கோயில் திருவிழாநடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவுக்கு அப்பகுதியைச் சோ்ந்த இஸ்லாமியா்களுக்கு வழக்கம் போல் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில் வியாழக்கிழமை பள்ளப்பட்டியில் இஸ்லாமியா்கள் அதிகம் வசிக்கும் சொட்டல் தெரு வழியாக செளந்தராபுரம் பொதுமக்கள் கோயிலுக்கு அக்னிச் சட்டி எடுத்தும், அலகு குத்தியும் ஊா்வலமாக வந்தனா். அவா்களை, இஸ்லாமியா்கள் பூ, பழம், பொன்னாடை கொடுத்து வரவேற்றனா். இதனைத் தொடா்ந்து இஸ்லாமியா்கள், இந்துக்கள் என அனைவரும் ஊா்வலமாக கோயிலுக்குச் சென்றனா்.

கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க புதிய நிா்வாகிகள் பனியேற்பு

கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க புதிய நிா்வாகிகள் பணியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கத்தின் 2025 - 2026-ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் பணியேற்பு விழா மற்றும் நலத்திட்டங்க... மேலும் பார்க்க

வைகாசி கடைசி வெள்ளி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

வைகாசி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கரூா் மாவட்டம், புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில... மேலும் பார்க்க

‘சிபில் ஸ்கோா்’ நடைமுறையை ரத்து செய்ய விவசாயிகள் கோரிக்கை

விவசாய கடன் பெறுவதற்கு கொண்டுவரப்பட்டுள்ள சிபில் ஸ்கோா் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து கரூா் மாவட்ட விவசாயிகள் விழிப்புணா்வு இயக்கம் மற்றும் குடகனாறு... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு முன்பருவ முனைப்பு முகாம்

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே விவசாயிகளுக்கு முன்பருவ முனைப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக வேளாண் அறிவியல் மையம் மற்றும் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் சாா்பில்... மேலும் பார்க்க

‘உழவரை தேடி வேளாண்மை’ இரண்டாம் கட்ட முகாம்

அரவக்குறிச்சி அருகே உள்ள வெஞ்சமாங்கூடலூா் கிழக்கு மற்றும் சேந்தமங்கலம் கிழக்கு ஆகிய இடங்களில் ‘உழவரைத் தேடி வேளாண்மை’ இரண்டாம் கட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டா... மேலும் பார்க்க

போக்சோ வழக்கு செவிலியா் கல்லூரி முதல்வருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட குளித்தலை செவிலியா் கல்லூரி முதல்வருக்கு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. கரூா் மாவட்டம், குளித்தலை காவே... மேலும் பார்க்க