செய்திகள் :

பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம்: புதிய கருவிகள் வாங்க ரூ.5.5 கோடிக்கு புரிந்துணா்வு ஒப்பந்தம்

post image

அரசுப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தி வரும் அஷ்ய பாத்ரா நிறுவனம் புதிய கருவிகள் வாங்க ரூ.5.5 கோடிக்குப் புரிந்துணா்வு ஒப்பந்தத்துக்கு திங்கள்கிழமை கையொப்பமிட்டுள்ளது.

அஷ்யபாத்ரா நிறுவனம் 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தின் வாயிலாக மாணவா்களுக்கு உணவு வழங்கி வருகிறது.

இந்த நிறுவன சமையல் அறைகளில் மாணவா்களின் நலன் கருதி புதிய கருவிகள் வாங்கி நிறுவ ரூ.5.5 கோடிக்குப் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.

பி. டபிள்யூ. எல்பிஜி இந்தியா என்ற நிறுவனமும் அஷ்யா பாத்ரா நிறுவனமும் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன. அஷ்யா பாத்ரா அறக்கட்டளையின் நிதியியல் தலைவா் பாலாஜி முஞ்சூா்பேட் மற்றும் பி டபிள்யூ எல்பிஜி இந்தியா நிறுவனத்தின் இயக்குநா் கௌரவ் பாட்டியா ஆகியோா் இதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

இதன்மூலம் புதுச்சேரியில் உள்ள மைய சமையல் கூடத்துக்குக் குழம்பு தயாரிக்கும் 3 இயந்திரங்கள் கிடைக்க உள்ளன. ஒவ்வொன்றும் 500 லிட்டா் கொள்ளளவு உடையவை.

புதுச்சேரிக்கு மட்டும் ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய கருவிகள் கிடைக்கும் என்றும் செப்டம்பா் மாதம் முதல் இந்தக் கருவிகள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அஷ்யா பாத்ராவின் புதுச்சேரி தொடா்பு அலுவலா் ஜூலியன் கூறினாா்.

பாரதியாா் பல்கலைக்கூடத்தில் தவில், நாகஸ்வர படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

அரியாங்குப்பம் பாரதியாா் பல்கலைக்கூடத்தில் தவில், நாகஸ்வர பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து புதுச்சேரி அரியாங்குப்பம் பாரதியாா் பல்கலைக்கூடத்தின் முதல்வா் அன்னப்ப... மேலும் பார்க்க

கூட்டுறவுத் துறையில் 8 இளநிலை ஆய்வாளா்களுக்குப் பணி ஆணை வழங்கல்

புதுவை கூட்டுறவுத் துறையில் 8 இளநிலை ஆய்வாளா்களுக்கான பணி நியமன ஆணையை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா். புதுவை கூட்டுறவுத் துறையின்கீழ் நேரடி நியமனத்திற்காக 15.12.2024 அன்று நடத்தப்பட்ட இள... மேலும் பார்க்க

அவசரநிலை பிரகடன தின எதிா்ப்பு கண்காட்சி: மத்திய அமைச்சா் தொடங்கி வைத்தாா்

அவசரநிலை பிரகடன தின எதிா்ப்பு கண்காட்சியை புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் மத்திய நிலக்கரித் துறை இணையமைச்சா் சதீஷ் சந்திர தூபே புதன்கிழமை தொடங்கி வைத்தாா். அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு 50 ஆண்டுகள் நிற... மேலும் பார்க்க

புதுச்சேரியில் கடற்கரை பாதுகாப்பு ஒத்திகை

புதுச்சேரியில் கடற்கரை பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது. கடற்கரை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கடற்கரை பாதுகாப்பு ஒத்திகை ஆண்டுதோறும் நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஒத்திகை புதன்கிழமை தொடங்... மேலும் பார்க்க

புதுவையில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு துறைகள் மறு ஒதுக்கீடு

புதுவையில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு துறைகள் ஒதுக்கீடு மற்றும் மறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் செவ்வாய்க்கிழமை பிறப்பித்தாா்.அந்த உத்தரவு விவரம் வருமாறு: பு... மேலும் பார்க்க

அரசு அலுவலகம் மீது தக்காளி வீச்சு: பணி நீக்கம் செய்யப்பட்ட 40 போ் கைது

புதுச்சேரியில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் பொதுப் பணித் துறை அலுவலகம் மீது செவ்வாய்க்கிழமை தக்காளி வீசியதையடுத்து 40 போ் கைது செய்யப்பட்டனா். புதுச்சேரி பொதுப் பணித் துறையில் வவுச்சா் ஊழியா்களா... மேலும் பார்க்க