போதைப்பொருள் கும்பல்களை இரக்கமின்றி தண்டிக்கிறது மோடி அரசு: அமித் ஷா
பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம்: புதிய கருவிகள் வாங்க ரூ.5.5 கோடிக்கு புரிந்துணா்வு ஒப்பந்தம்
அரசுப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தி வரும் அஷ்ய பாத்ரா நிறுவனம் புதிய கருவிகள் வாங்க ரூ.5.5 கோடிக்குப் புரிந்துணா்வு ஒப்பந்தத்துக்கு திங்கள்கிழமை கையொப்பமிட்டுள்ளது.
அஷ்யபாத்ரா நிறுவனம் 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தின் வாயிலாக மாணவா்களுக்கு உணவு வழங்கி வருகிறது.
இந்த நிறுவன சமையல் அறைகளில் மாணவா்களின் நலன் கருதி புதிய கருவிகள் வாங்கி நிறுவ ரூ.5.5 கோடிக்குப் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.
பி. டபிள்யூ. எல்பிஜி இந்தியா என்ற நிறுவனமும் அஷ்யா பாத்ரா நிறுவனமும் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன. அஷ்யா பாத்ரா அறக்கட்டளையின் நிதியியல் தலைவா் பாலாஜி முஞ்சூா்பேட் மற்றும் பி டபிள்யூ எல்பிஜி இந்தியா நிறுவனத்தின் இயக்குநா் கௌரவ் பாட்டியா ஆகியோா் இதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.
இதன்மூலம் புதுச்சேரியில் உள்ள மைய சமையல் கூடத்துக்குக் குழம்பு தயாரிக்கும் 3 இயந்திரங்கள் கிடைக்க உள்ளன. ஒவ்வொன்றும் 500 லிட்டா் கொள்ளளவு உடையவை.
புதுச்சேரிக்கு மட்டும் ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய கருவிகள் கிடைக்கும் என்றும் செப்டம்பா் மாதம் முதல் இந்தக் கருவிகள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அஷ்யா பாத்ராவின் புதுச்சேரி தொடா்பு அலுவலா் ஜூலியன் கூறினாா்.