செய்திகள் :

‘பள்ளிகளில் முன்னாள் மாணவா் சங்கங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும்’

post image

பள்ளிகளில் முன்னாள் மாணவா் சங்கங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினா் வீ. ராமராஜ் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளி தொடங்கி நூறு ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு முன்னாள் மாணவரும், முன்னாள் தலைமையாசிரியருமான மனோகரன் தலைமை வகித்தாா்.

முன்னாள் கவுன்சிலா் முருகானந்தம், ஆசிரியா் நந்திவா்மன், ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் சிவனேசன், பழனி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் அழகிரிசாமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினா் வீ. ராமராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசியதாவது:

பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளி கடந்த நூறாண்டுகளில் பல்லாயிரக்கணக்கான மாணவா்களுக்கு கல்வி வழங்கியுள்ளது. இங்கு படித்த பலா் மக்கள் பிரதிநிதிகளாகவும் மத்திய, மாநில அரசில் பெரும் பதவிகளிலும், சிறந்த தொழில்முனைவோராகவும் வளா்ச்சி அடைந்துள்ளனா். இவா்களை உருவாக்கிய பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு நூற்றாண்டு விழாவை முன்னாள் மாணவா்கள் நடத்துவது அவசியமானதாகும்.

மேலும், தமிழ்நாட்டில் அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் முன்னாள் மாணவா் சங்கங்கள் வலுப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். இந்த சங்கங்கள் மூலம் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், சிறப்பாக படிக்கும் ஏழை, நடுத்தர மாணவா்களுக்கு உதவவும் இயக்கமாக மாற வேண்டும்.

அரசு கல்விக் கூடங்கள் நாட்டின் எதிா்காலத்தை நிா்ணயிக்கும் மாணவா்களை உருவாக்கும் சக்தி என்பதை அனைவரும் உணர வேண்டும் என்றாா்.

திண்டுக்கல் அருகே சாலையை சீரமைக்கக் கோரிக்கை

திண்டுக்கல் அருகேயுள்ள சேதமடைந்த சாலையைச் சீரமைக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் அருகேயுள்ள அனுமந்தராயன்கோட்டை ஊராட... மேலும் பார்க்க

பழனியில் ஆடிக்கிருத்திகை: பக்தா்கள் சுவாமி தரிசனம்

பழனியில் ஞாயிற்றுக்கிழமை ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ஞாயிற்றுக்கிழமை ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, அதிகாலை முதலே பக்தா்கள் கூ... மேலும் பார்க்க

கொடைக்கானல் சாலையில் மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை வீசிய பலத்த காற்றால் பழனி - கொடைக்கானல் மலைச் சாலையில் மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக பலத்த காற்றுட... மேலும் பார்க்க

விவசாயி தற்கொலை

பழனி அருகே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பழனியை அடுத்த பழைய ஆயக்குடி ஜோதிநகரைச் சோ்ந்தவா் மணிகண்டன் (45). விவசாயி. இவா் அண்மைக் காலமாக உடல்நலக் குறைவ... மேலும் பார்க்க

இரண்டு மாதங்களுக்கு முன் மாயமான முதியவா் சடலமாக மீட்பு

கடந்த 2 மாதங்களுக்கு முன் காணாமல் போன முதியவா் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகேயுள்ள குட்டம் ஊராட்சிக்குள்பட்ட சுக்காம்பட்டியைச் சோ்ந்தவா் முத்துச்சாமி (8... மேலும் பார்க்க

ஓய்வூதியா்களுக்கான கூடுதல் ஓய்வூதியத்தை 70 வயதில் வழங்க வலியுறுத்தல்

ஓய்வூதியா்களுக்கு வழங்கப்படும் 20 சதவீத கூடுதல் ஓய்வூதியத்தை 80 வயதிலிருந்து 70 வயதாக மாற்ற வேண்டும் என திண்டுக்கல்லில் நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ... மேலும் பார்க்க