செய்திகள் :

பள்ளிகளில் 'வாட்டர் பெல்' திட்டம் நடைமுறைக்கு வந்தது!

post image

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தண்ணீர் அருந்துவதை உறுதி செய்யும் 'வாட்டர் பெல்' திட்டம் இன்று(திங்கள்கிழமை) அமலுக்கு வந்தது.

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு நாளும் காலை 11 மணிக்கு, பகல் 1 மணிக்கு, பிற்பகல் 3 மணிக்கு என 3 முறை வாட்டர் பெல் அடிக்கப்படும், அப்போது மாணவர்கள் தண்ணீர் அருந்த வேண்டும்.

வெயிலின் தாக்கத்தால் குழந்தைகளிடையே நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கவும் நீர்ச்சத்துக் குறைபாடால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுவதைத் தடுக்கவும் இந்த திட்டம் கொண்டுவரப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்த நிலையில் இந்த திட்டம் இன்று(ஜூன் 30) முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதன்படி, காலை 11 மணி, பிற்பகல் 1 மணி, மாலை 3 மணி என பள்ளிகளில் மணி ஒலிக்கும்போது மாணவர்கள் தவறாது தண்ணீர் அருந்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வகுப்புச் சூழல் பாதிக்கப்படாத வகையில், பள்ளிகளில் 2 - 3 முறை வாட்டர் பெல் அடிக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Water Bell scheme, which ensures that students drink water in schools in Tamil Nadu, came into effect today (June 30).

இதையும் படிக்க | சென்னையில் மின்சாரப் பேருந்து சேவையை தொடக்கிவைத்தார் முதல்வர்!

பெரிய வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வு!

பெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 3.16 சதவீதத்திற்கு மிகாமல், மின் கட்டண உயர்த்தப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (ஜூன் 30) தெரிவித்துள்ளார். சிறு வணிகர... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 16 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்க... மேலும் பார்க்க

அரசியல், கொள்கை எதிரியைத்தவிர யார் வந்தாலும் அரவணைப்போம்: தவெக

அரசியல் எதிரி, கொள்கை எதிரியைத்தவிர யார் வந்தாலும் அரவணைப்போம் என தமிழக வெற்றிக்கழக மாநில கொள்கைப் பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிறந்தநாளை ஒட்... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 12 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று(ஜூன் 30) ஒருசி... மேலும் பார்க்க

நீதியை நிலைநாட்ட வேண்டும்: காவல்துறையினருக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

காவல் நிலையங்களுக்குப் புகார் கொடுக்க வரும் மக்களிடம் கண்ணியத்தோடு நடந்து கொண்டு அவர்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று காவல்துறையினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அ... மேலும் பார்க்க

சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு விநியோகம்: விரைவில் அமல்!

சென்னயில் 8 இடங்களில் குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு விநியோகம் செய்யும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது.மத்திய அரசு, தமிழ்நாட்டில் நகர இயற்கை எரிவாயு விநியோகத்தினை, குழாய்கள் மூலம் வழங்குவதற்... மேலும் பார்க்க