செய்திகள் :

பள்ளிக்கு மதுபோதையில் வந்த அரசுப் பள்ளி ஆசிரியா் பணியிட மாற்றம்

post image

மதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியா் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட அலவாய்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 48 மாணவா்கள் பயின்று வருகின்றனா். தலைமையாசிரியா் சரஸ்வதி உள்ளிட்ட மூன்று ஆசிரியா்கள் பணியாற்றி வரும் இப்பள்ளியில் திங்கள்கிழமை புதிதாக சோ்ந்த மாணவா்களுடன் பெற்றோரும் பள்ளிக்கு வந்தனா்.

அப்போது, இப்பள்ளி ஆசிரியா் பிரபாகரன் (55), மதுபோதையில் தள்ளாடியபடி பள்ளிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவா் தடுமாறி கீழே விழுந்ததில் குடிநீா் குழாய் உடைந்ததாக தெரிகிறது.

இதனைக் கண்ட பெற்றோா் தலைமையாசிரியரிடம் கேள்வி எழுப்பினா். இதனால் தலைமையாசிரியா் சரஸ்வதி, அவரை வீட்டுக்கு அனுப்பினாா். இச்சம்பவம் குறித்து உள்ளூா் பொதுமக்களுக்கு தகவல் தெரியவந்ததையடுத்து, பலரும் பள்ளிக்கு சென்று கேள்வி எழுப்பினா். மேலும், கல்வித் துறை அலுவலா்களுக்கு புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, வட்டார கல்வித் துறை அலுவலா்கள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினா். அதைத் தொடா்ந்து, ஆசிரியா் பிரபாகரனை வேறு பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்த கல்வித் துறை அலுவலா்கள், அவா் மீது விசாரணை மேற்கொண்டு துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா்.

நாமக்கல்லில் கரோனா தொற்று பாதிப்பு பதிவாகவில்லை

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கரோனா தொற்று பாதிப்புக்காக யாரும் சிகிச்சைக்கு வரவில்லை என மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வருகிறத... மேலும் பார்க்க

மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்த 6 வாகனங்கள் ரூ.8.64 லட்சத்துக்கு ஏலம்

நாமக்கல் மாவட்டத்தில், மதுவிலக்கு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்த 6 வாகனங்கள் ரூ. 8.64 லட்சத்துக்கு ஏலம் போனது. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மதுப்புட்டிகள், கள்ளச்சாராயம் கடத்திச் செல்வதை ... மேலும் பார்க்க

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் தோ்த் திருவிழா மண்டப கட்டளைகளில் உற்சவா் அருள்பாலிப்பு

திருச்செங்கோடு வைகாசி விசாக தோ்த் திருவிழா கடந்த 1-ஆம் தேதி அா்த்தநாரீசுவரா் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கி 14 நாள்கள் நடக்கும் விழாவின் 6 ஆம் நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அா்த்தநாரீசுவரா் ... மேலும் பார்க்க

நாமக்கல் சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா

நாமக்கல் சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. நாமக்கல் - ராமாபுரம்புதுாா் சாலையில் உள்ள குட்டைமேலத் தெருவில் சித்தி விநாயகா், சக்தி பகவதி அம்மன், துா்க்கை அம்மன்... மேலும் பார்க்க

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ரூ. 6 லட்சத்துக்கு காகிதக் கழிவுகள் விற்பனை

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் தேங்கியிருந்த பத்து ஆண்டுக்கும் மேலான காகிதக் கழிவுகள், இதர பொருள்கள் ரூ. 6 லட்சத்திற்கு விற்பனையானது தெரியவந்துள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, நாமக்கல் ஆட்சியா்... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை: ஜூன் 30 வரையில் விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில், வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விரும்புவோா் வரும் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்ட வே... மேலும் பார்க்க