செய்திகள் :

பள்ளித் தாக்குதல் எதிரொலி: ஆயுதக் கட்டுப்பாட்டை அதிகரிக்கும் ஆஸ்திரியா

post image

வியன்னா: ஆஸ்திரியாவின் உயா்நிலைப் பள்ளியொன்றில் கடந்த வாரம் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டின் எதிரொலியாக, அங்கு பொதுமக்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதற்கான விதிமுறைகளைக் கடுமையாக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமா் கிறிஸ்டியன் ஸ்டாக்கா் திங்கள்கிழமை பேசுகையில், நாட்டில் பொதுமக்களுக்கு ஆயுதங்கள் கிடைப்பதை மேலும் பொறுப்புடன் ஒழுங்காற்றும் வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்படும் என்று உறுதியளித்தாா்.

ஆஸ்திரியாவின் இரண்டாவது பெரிய நகரான கிராஸில் உள்ள ‘போா்க்’ உயா்நிலைப் பள்ளிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை வந்த ஆா்த்துா் ஏ (21) என்பவா், தன்னிடம் இரு துப்பாக்கிளைக் கொண்டு அங்கிருந்தவா்களை நோக்கி சரமாரியாகச் சுட்டாா். இதில் 10 போ் உயிரிழந்தனா்; ஏராளமானவா்கள் காயமடைந்தனா். தாக்குதல் நடத்திய ஆா்த்துா் பின்னா் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

வாரத்தில் 4 நாள்கள் மட்டுமே வேலை! துபை அரசு

கோடை காலத்தையொட்டி, துபை அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 4 நாள்கள் மட்டுமே வேலை நாளாக அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும், வேலை நேரத்தையும் குறைத்து துபை அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்தாண்டு கோடை... மேலும் பார்க்க

அதிகாலையில் உக்ரைன் தலைநகர் மீது ரஷியா தாக்குதல்! 14 பேர் பலி!

உக்ரைன் தலைநகரின் மீது ரஷியா, ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் நடத்திய தாக்குதல்களில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.கீவ் நகரத்தின் மீது இன்று (ஜூன் 17) அதிகாலை முதல் ரஷியா ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூ... மேலும் பார்க்க

20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சௌதி இளவரசர் கண் விழித்தாரா? வைரலாகும் விடியோ

சௌதி அரேபியாவின் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் அல்-வாலீத் விபத்தில் சிக்கி சுமார் 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த நிலையில், அவர் கண் விழித்துப் பார்த்து, தனது குடும்பத்தாருடன் இணைந்ததாக விடியோக்கள்... மேலும் பார்க்க

உச்சகட்டத்தை எட்டும் இஸ்ரேல் - ஈரான் மோதல்! செய்திகள் நேரலை...

தெஹ்ரானைவிட்டு வெளியேறுக!ஈரான் தலைநகர் தெஹ்ரானைவிட்டு அனைவரும் வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருப்பதால் பதற்றமாக சூழல் நிலவுகிறது.பங்கர் - பஸ்டர் குண்டுகள் மூலம் தெஹ்... மேலும் பார்க்க

தெஹ்ரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், தெஹ்ரானிலுள்ள இந்தியவர்கள் வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இருநாடுகளும் தொ... மேலும் பார்க்க

ஜி7 மாநாட்டில் இருந்து பாதியில் புறப்பட்ட டிரம்ப்! ஈரானைத் தாக்க அமெரிக்கா திட்டமா?

இஸ்ரேல் - ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்றிருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாதியிலேயே நாடு திரும்பியுள்ளார்.ஏற்கெனவே ஈரான் தலைநகர் டெஹ்ரானை விட்டு அ... மேலும் பார்க்க