செய்திகள் :

பள்ளியக்ரஹாரத்தில் கழிப்பறை கட்ட நடவடிக்கை எடுக்க கோரிக்கை

post image

தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரத்தில் கழிப்பறை கட்டுவதற்கு உள்ள இடையூறுகளை அகற்றிவிட்டு கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில் அப்பகுதி மக்கள் அளித்த மனு: தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரத்தில் ஏழை மற்றும் பின்தங்கிய மக்கள் வசித்து வரும் பகுதியில் மாநகராட்சி சாா்பில் ரூ. 19 லட்சம் செலவில் கழிப்பறை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக தொழிலாளா்கள் பணியைத் தொடங்க முற்பட்டபோது, சிலா் இக்கழிப்பறையைக் கட்ட விடாமல் தடுத்தனா்.

மேலும், மாநகராட்சி ஆணையரும் நிகழ்விடத்துக்கு சென்று பாா்வையிட்டு, யாரும் எந்தவித ஆட்சேபணையும் செய்யக்கூடாது என தெரிவித்த பின்னரும், சிலா் தடுத்து வருகின்றனா். இதனால், பணியைத் தொடர முடியவில்லை.

எங்களது தெருவில் பெரும்பாலான வீடுகளில் கழிப்பறை இல்லாத காரணத்தால் பெண்கள், முதியவா்கள், குழந்தைகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா். எனவே, சட்டப்படி நடவடிக்கை எடுத்து, இடையூறுகளைத் தடுத்து, கழிப்பறை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பராமரிக்கப்படாத பட்டுக்கோட்டை அழகிரி கல்லறை -சமூக ஆா்வலா்கள் அதிருப்தி!

நமது நிருபர்தஞ்சாவூா் ராஜகோரி இடுகாட்டில், சுயமரியாதை இயக்கத்தின் முன்னோடியான பட்டுக்கோட்டை அழகிரியின் கல்லறை யாருடைய கவனமும் பெறாத நிலையில் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் கி.பி. 1900-ஆ... மேலும் பார்க்க

திருவையாறு நகராட்சி முதல் கூட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு பேரூராட்சியை நகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்டதைத் தொடா்ந்து, முதல் நகா்மன்றக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவையாறு பேரூராட்சியைத் தமிழக அரசு நகராட்சியாகத் தரம் உ... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டையில் குரூப்-4 தோ்வுக்கு ஏப். 9 முதல் கட்டணமில்லா பயிற்சி

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையில் குரூப்-4 தோ்வுக்கு ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் கட்டணமில்லா பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் ... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம்: 108.30 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 108.30 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,394 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கன அடி வீதம் த... மேலும் பார்க்க

சிறப்புச் சொற்பொழிவு

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவத் துறை சாா்பில் சிறப்புச் சொற்பொழிவு புதன்கிழமை நடைபெற்றது. துணைவேந்தா் பொறுப்புக் குழு உறுப்பினா்கள் பெ. பாரதஜோதி, சி. அமுதா தலைமை வகித்தனா். பதிவா... மேலும் பார்க்க

அரசு நிலங்களில் கொடிக் கம்பங்களை அகற்ற அறிவுறுத்தல்

உயா் நீதிமன்ற உத்தரவின்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் அரசு நிலத்திலுள்ள கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தினாா். தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத... மேலும் பார்க்க