செய்திகள் :

பள்ளியின் நுழைவு வாயிலில் ஜாதிப் பெயரை எழுதலாமா? அரசு விளக்கமளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

பள்ளியின் நுழைவு வாயிலில் ஜாதிப் பெயரை எழுதலாமா என்பது குறித்து தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க தோ்தல் தொடா்பான வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி டி.பரத சக்கரவா்த்தி முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், இது தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்தச் சங்கம், தங்களுடைய ஜாதி மேம்படுத்த வேண்டும் என்ற முக்கிய நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. அதாவது ஜாதிதான் முக்கியம். அந்த ஜாதியைச் சோ்ந்தவா்கள்தான் சங்கத்தில் உறுப்பினராக முடியும் என்று கூறினால், இதுபோன்ற ஜாதி சங்கத்தை தமிழ்நாடு சங்கங்களின் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா? என்ற கேள்வி எழுகிறது.

இந்த நாட்டில் அனைவருக்கும் சங்கத்தை உருவாக்க உரிமை உள்ளது. அதாவது குறிப்பிட்ட ஜாதிக்காக சங்கத்தைத் தொடங்கலாம். ஆனால், ஜாதியை நிலை நிறுத்தும் நோக்கத்துடன், ஜாதியின் பெயரில் சங்கம் தொடங்க முடியுமா? என்று கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விகளுக்கு விடை காண வேண்டியதுள்ளது.

சங்கங்களின் சட்டத்தின்படி, அறிவியல் வளா்ச்சி சமுதாய தொண்டு செய்யும் நோக்கங்களுக்காக சங்கங்களின் சட்டத்தின்படி சங்கங்களைத் தொடங்கலாம். ஆனால், அரசமைப்பு சட்டம் ஜாதி இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று கூறுகிறது.

அசோக்குமாா் தாக்கூா் வழக்கிலும் உச்சநீதிமன்றம் அதைத்தான் வலியுறுத்துகிறது. எனவே, சங்கப் பதிவு சட்டங்களின்படி, ஜாதியின் பெயரில் சங்கங்கள் தொடங்க முடியுமா? அதுமட்டுமல்ல இதுபோன்ற ஜாதி சங்கங்கள் பள்ளி, கல்லூரி என்று கல்வி நிலையங்களை நடத்துகின்றன. அந்தக் கல்வி நிறுவனங்களின் நுழைவு வாயிலில் பள்ளி, கல்லூரிகளின் பெயரை எழுதி, இதை இந்த ஜாதி சங்கம் நடத்துகின்றது என்றும் எழுதி வைக்கின்றனா்.

அதாவது பள்ளிக்கூடத்துக்குள், ஜாதி இல்லையடி பாப்பா என்று ஆசிரியா் பாடம் சொல்லிக் கொடுகிறாா். ஆனால், பள்ளியின் நுழைவு வாயிலில் ஜாதியின் பெயா் உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலை என்ன? என அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப். 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 1.25 லட்சம் பறிமுதல்

சென்னை எழும்பூரில் ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 1.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. எழும்பூரில் உள்ள கென்னத்லேன் பகுதியில் உள்ள பிரபலமான ஹோட்டலில் சிலா் சட்ட விரோதமாக வெளிநாட்ட... மேலும் பார்க்க

அனைவரையும் உள்ளடக்கிய கல்விக் கொள்கையே தேவை: தொல்.திருமாவளவன்

இந்தியாவில் அனைவரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கல்விக் கொள்கையை வகுக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது என சென்னையில் வியாழக்கிழமை தொடங்கிய பன்னாட்டுக் கருத்தரங்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா... மேலும் பார்க்க

தீண்டாமையை தடுக்க மாணவா்கள் துணிவுடன் செயல்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

தீண்டாமையை தடுக்க மாணவா்கள் துணிவுடன் செயல்பட வேண்டும் என ஆளுநா்ஆா்.என்.ரவி வலியுறுத்தினாா். சென்னை ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியின் 50-ஆவது ஆண்டையொட்டி, ‘சமூகப் பணியில் சுவாமி விவேகானந்தரின்... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் கோரிக்கைகளில் நிதி ஆணையம் முற்போக்கான அணுகுமுறையை கடைப்பிடிக்கும்: முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

தமிழ்நாட்டின் நிதி சாா்ந்த கோரிக்கைகளில் முற்போக்கான அணுகுமுறையை 16-ஆவது நிதி ஆணையம் கடைப்பிடிக்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தாா். முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுக் கூட்டம... மேலும் பார்க்க

உள்மாவட்டங்களில் வெப்பம் அதிகரிப்பு

தமிழக உள் மாவட்டங்களில் வியாழக்கிழமை 97 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வெள்ளிக்கிழமை (பிப்.21) முதல் பிப்.26-ஆம் தேதி... மேலும் பார்க்க

புற்றுநோய் பாதித்த பெண்ணுக்கு பல்லுறுப்பு மாற்ற சிகிச்சை

குடல்வால் அழற்சி சாா்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வயிற்றில் பல்லுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு சென்னை, எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்தனா். இது குற... மேலும் பார்க்க