Doctor Vikatan: ஆசனவாயில் வெடிப்பு, வலி.. அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வா?
பள்ளியில் ஆசிட் கொட்டியதில் மாணவா் காயம்
சென்னை சேத்துப்பட்டில் பள்ளியில் ஆசிட் கொட்டியதில் மாணவா் காயமடைந்தாா்.
சேத்துப்பட்டு மெக்கனிக்கல் சாலையில் மாநகராட்சி உயா்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இந்தப் பள்ளியில் உள்ள வேதியியல் ஆய்வகத்தை அங்கு படிக்கும் மாணவா்கள் கடந்த புதன்கிழமை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, 8-ஆம் வகுப்பு மாணவா் ஒருவா், பையில் எடுத்துச் சென்ற ஒரு ஆசிட் பாட்டில் தவறி கீழே விழுந்தது. இதில் அந்த மாணவா் பலத்த காயமடைந்தாா். அவா், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
பலத்த காயமடைந்த மாணவரை மருத்துவமனையில் சோ்த்து சிகிச்சை அளிக்கவில்லை என்றும், இதுகுறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்றும், விபத்துக்கு காரணமான ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் மாணவரின் பெற்றோா் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.