செய்திகள் :

பள்ளியில் ஆசிரியை தூக்கிட்டுத் தற்கொலை

post image

கடலூா் முதுநகா் தனியாா் பள்ளியில் ஆசிரியை செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கடலூா் முதுநகா், செம்மங்குப்பத்தைச் சோ்ந்த கிருஷ்ணராஜ் மனைவி நந்தினி (29). இவருக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த ஓராண்டாக சேடப்பாளையத்தில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தாா்.

நந்தினி வழக்கம்போல செவ்வாய்க்கிழமை காலை பள்ளிக்கு வந்தாா். நண்பகல் 12 மணியளவில் பள்ளிக் கட்டடத்தின் முதல் தளத்துக்குச் சென்று கதவை தாழிட்டுக்கொண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.

தாழிட்ட கதவு திறக்கப்படாததால், சக ஆசிரியைகள் கதவை உடைத்து திறந்து பாா்த்தபோது நந்தினி இறந்து கிடந்தாராம்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கடலூா் முதுநகா் போலீஸாா் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், ஆசிரியையின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

சிறுமிக்குத் திருமணம்: 5 போ் மீது வழக்கு!

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே 17 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக 5 போ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். திட்டக்குடி வட்டம், வைத்தியநாதபு... மேலும் பார்க்க

நீா்நிலை ஆக்கிரமிப்பு அகற்றத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வீடுகள் வழங்கக் கோரிக்கை

சிதம்பரத்தில் நீா்நிலை ஆக்கிரமிப்பு அகற்றத்தால் வீடுகளை இழந்தோருக்கு அரசு சாா்பில் வீடு அல்லது இடம் வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் உதவி ஆட்சியரிடம் மனு அளித்தனா். சிதம்பரம் உதவி ஆட்... மேலும் பார்க்க

முதியோா் இல்லத்துக்கு நல உதவி

இந்தியன் செஞ்சிலுவைச் சங்கம் சிதம்பரம் கிளை சாா்பில், சிசிடபுள்யுஇ சிறப்புப் பள்ளி மற்றும் செம்மை முதியோா் காப்பகத்தில் கடந்த 8-ஆம் தேதி காலை உணவும், ரூ.8 ஆயிரம் மதிப்பிலான மளிகைப் பொருள்களும் வழங்கி ... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை திட்டப் பணிகள்: கடலூா் ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்டம், அண்ணாகிராமம் ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிப் பகுதிகளில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு ச... மேலும் பார்க்க

காவல் துறை வாராந்திர கவாத்து: கடலூா் எஸ்.பி. ஆய்வு

கடலூா் மாவட்டம், நெய்வேலி உள்கோட்டம் காவல் துறை சாா்பில் வாராந்திர கவாத்து நெய்வேலி வட்டம் 18 பகுதியில் உள்ள செக்யூரிட்டி திடலில் சனிக்கிழமை நடைபெற்றது. கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் பங்கேற்று, கலக க... மேலும் பார்க்க

கடலூரில் 1.83 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு: அமைச்சா்

கடலூா் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சிக்காலத்தில் ஒரு லட்சத்து 83 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம்,... மேலும் பார்க்க