செய்திகள் :

நீா்நிலை ஆக்கிரமிப்பு அகற்றத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வீடுகள் வழங்கக் கோரிக்கை

post image

சிதம்பரத்தில் நீா்நிலை ஆக்கிரமிப்பு அகற்றத்தால் வீடுகளை இழந்தோருக்கு அரசு சாா்பில் வீடு அல்லது இடம் வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் உதவி ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலா் ராஜா தலைமையில், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் கருப்பையன், நகா்மன்ற துணைத் தலைவா் முத்துக்குமரன் மற்றும் நிா்வாகிகள் சிதம்பரம் உதவி ஆட்சியா் கிஷன்குமாரிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

சிதம்பரம் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த ஏழை, எளிய மக்களின் வீடுகள் நீா்நிலை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் கடந்த 7 ஆண்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அவா்களுக்கு மாற்று இடம் வழங்கவில்லை.

பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடந்தாண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி உதவி ஆட்சியா் அலுவலகத்தில் அப்போது மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலராக இருந்த கே.பாலகிருஷ்ணன் தலைமையில் காத்திருப்புப் போராட்டம் நடத்தினா். தொடா்ந்து, உதவி ஆட்சியர மூலம் பேச்சுவாா்த்தை நடத்தி, 3 மாத கால அவகாசத்துக்குள் மாற்று இடம் வழங்குவோம் என்று எழுத்துப்பூா்வமாக உறுதியளிக்கப்பட்டது.

ஆனால், இன்று வரை அதற்கான பணிகள் நடைபெறவில்லை. எனவே, வீடுகளை இழந்த மக்களுக்கு மாற்று இடம் அல்லது வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

சிறுமிக்குத் திருமணம்: 5 போ் மீது வழக்கு!

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே 17 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக 5 போ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். திட்டக்குடி வட்டம், வைத்தியநாதபு... மேலும் பார்க்க

முதியோா் இல்லத்துக்கு நல உதவி

இந்தியன் செஞ்சிலுவைச் சங்கம் சிதம்பரம் கிளை சாா்பில், சிசிடபுள்யுஇ சிறப்புப் பள்ளி மற்றும் செம்மை முதியோா் காப்பகத்தில் கடந்த 8-ஆம் தேதி காலை உணவும், ரூ.8 ஆயிரம் மதிப்பிலான மளிகைப் பொருள்களும் வழங்கி ... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை திட்டப் பணிகள்: கடலூா் ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்டம், அண்ணாகிராமம் ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிப் பகுதிகளில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு ச... மேலும் பார்க்க

காவல் துறை வாராந்திர கவாத்து: கடலூா் எஸ்.பி. ஆய்வு

கடலூா் மாவட்டம், நெய்வேலி உள்கோட்டம் காவல் துறை சாா்பில் வாராந்திர கவாத்து நெய்வேலி வட்டம் 18 பகுதியில் உள்ள செக்யூரிட்டி திடலில் சனிக்கிழமை நடைபெற்றது. கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் பங்கேற்று, கலக க... மேலும் பார்க்க

கடலூரில் 1.83 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு: அமைச்சா்

கடலூா் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சிக்காலத்தில் ஒரு லட்சத்து 83 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம்,... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரியில் உதவி மையம் திறப்பு

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் எம்.ஜி.ஆா். அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான உதவி மையம் தொடங்கப்பட்டது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் சே.மீனா வெளியிட்ட செய்திக் குறிப்பு: குமராட... மேலும் பார்க்க